Skip to main content

ஊஞ்சல் ஆடிய மாணவன் மயங்கி விழுந்து மரணம்..!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

Student dies after fainting while swinging

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகில் உள்ளது மணம்பூண்டி. இங்குள்ள புது நகரைச் சேர்ந்த தனராஜ் என்பவரது மகன் 13வயது யோகேஸ்வரன். இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (15.04.2021) மதியம் அவரது வீட்டில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.

 

அந்த நேரத்தில் ஊஞ்சல் மீது தொங்கிக்கொண்டிருந்த துணி ஒன்று எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த யோகேஸ்வரன் கழுத்தில் சுற்றியுள்ளது. ஊஞ்சல் விளையாடும் ஆர்வத்தின் காரணமாக யோகேஸ்வரன் அதைக் கவனிக்கவில்லை. இதனால் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார் யோகேஸ்வரன். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக யோகேஸ்வரனை திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், யோகேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுது துடித்தனர். இந்த விபத்தினால் 13 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன், அதில் இருந்த துணி அவரின் கழுத்தைச் சுற்றியுள்ளது.

 

விளையாடும் கவனத்தில் யோகேஸ்வரன் அதைக் கவனிக்காததால், அந்த துணி அவரது கழுத்தை இறுக்கி உயிரைப் போக்கியுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது கூட, அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், அவ்வப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கத் தவறினால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.