Skip to main content

திருநாவுக்கரசரை வைத்துக்கொண்டு போராட்டம்;நாடகமாகத்தான் தெரிகிறது-தம்பிதுரை!! .

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
thampidurai

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில்,

 

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அக்கறை இருந்தால் திமுக காங்கிரஸை கூட்டணியிலிருந்து  விலக்க வேண்டும். ஏனென்றால் முழு முழு காரணமும் காங்கிரஸ் ஆட்சிதான் கர்நாடகாவில்  நடைபெறுகிறது. இன்று எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில்  திருநாவுக்கரசரை, அதாவது காங்கிரசாரை வைத்துக்கொண்டு ஸ்டாலின் அவர்கள் போராட்டம் நடத்துவது ஒரு நாடகமாகத் தான் தெரிகிறது. 

 

இந்த நாடகத்தை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள் எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்