Skip to main content

யூடியூப் தலைமை அலுவலத்தில் துப்பாக்கிச்சூடு

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், நேற்று யூடியூப்  தலைமை அலுவகத்திற்கு, அந்த நாட்டின் நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அலுவகத்திக்குள் வந்த அந்த பெண் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை  எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலுவகத்தில் அங்கும் இங்குமாக ஓடினர். மேலும் இந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டால் நான்கு பேர் குண்டடிப்பட்டனர்.

 

youtube

 

சம்பவத்தை அறிந்து விரைந்த சான்புரூனோ காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்ணை கைதுசெய்ய முற்பட்டபோது, அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டாள்.

 

youtube

 

இதைத்தொடர்ந்து முதல் கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் நாசிம் அக்தம் என தெரியவந்துள்ளது. ஆனால் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விசாரணை நடத்தியதில் அந்த பெண் வேகனிசம்,பெர்சியன் கலாச்சாரம் பற்றிய யூட்யூப் சேனல் நடத்திவந்ததாகவும், அதை கூகுள் முடக்கி பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்க முற்பட்டகாகவும், அதனால் ஆத்திரமடைந்தே அந்த பெண் துப்பாக்கி சூடில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. குண்டடிபட்ட நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.