Skip to main content

பள்ளி ஆசிரியர் படுகொலை: மாணவியுடனான காதல் காரணமா?

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
Murder

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி தாயப்பர் தெருவை சேர்ந்தவர் சதீஷ். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 29.4.2018ஆம் தேதி இரவு நாட்றாம்பள்ளி ஏரிக்கோடியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை நண்பர்களோடு கண்டுகளித்துவிட்டு, இரவு 11 மணியளவில், ஏரிக்கரை சேவைச்சாலையில் தனியாக வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். 
 

அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்பு தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே சதீஷ் இறந்துள்ளார் என்று செய்திகள் பரவின. 
 

சம்பவ இடத்திற்கு வந்த நாட்றாம்பள்ளி காவல்துறையினர் உடலை கைப்பற்றி,  உடற்கூராய்விற்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் பள்ளி மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசியதாக கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு விவகாரத்துக்காக இந்த கொலை நடந்ததா என விசாரணை நடத்துவதோடு, சதீஷை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்