Skip to main content

சர்கார் ஓடும் தியேட்டரில் அதிகாரிகள் சோதனை.. ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு தடை? தமிழக அரசின் மறைமுக மிரட்டல்...

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
sarkar issue


 

திரைக்கு வரும் முன்பே கதை திருட்டு என்று பிரச்சனை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்திய சர்க்காருக்கு விலையில்லா விளம்பரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.


திரைக்கு வந்த வந்த பிறகு தற்போது தமிழக அமைச்சர்கள் முதல் ஆளுங்கட்சியினரும் விலையில்லா விளம்பரம் கொடுத்துவருகின்றனர். இதனால் வணிகரீதியிலான விளம்பரம் செய்து வரும் அமைச்சர்களுக்கு அமைதியாகவே நன்றி சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் தான் அரசாங்கம் பற்றிய காட்சிகளை அகற்ற வேண்டும் இல்லை என்றால் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர்ராஜூ பேட்டி கொடுத்தார். இன்று மதுரையில் தொடங்கி கோவை வரை திரையரங்கம் முற்றுகை போராட்டங்களை நடத்தினார்கள்.


இந்த நிலையில் தான் புதுக்கோட்டை நகரில் சர்கார் ஓடும் திரையரங்குகளுக்கு மாலை சில அதிகாரிகளுடன் சென்ற புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சி குமார்.. திரையரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டிக்கெட்களை ஆய்வு செய்தார். பிறகு டிக்கெட் அதிகவிலைக்கு விற்பதாக வந்த தகவலையடுத்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சரியான விலைக்கே விற்கிறார்கள். ஆனால் ஆன்லைன்ல அதிகவிலைக்கு விற்றது பற்றி எங்களால் கண்டுபிடிக்க முடியல. அதனால பரிசீலனை செய்து ஆன்லைன் பதிவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு சென்றார். 

 

தமிழக அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் சர்காருக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனால் புதுக்கோட்டையில் எப்பவுமே வித்தியாசமாக சிந்திக்கும் ஆளுங்கட்சி பிரமுகர் நேரடியாக எதையும் செய்யாமல் இப்படி அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். அது போல தான் இன்றும் டிக்கெட் விலை ஏற்றம் என்று சொல்லி ஆய்வுக்கு அதிகாரிகளை அனுப்பி திரையரங்குகளுக்கு முதல்கட்ட எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். கடந்த 3 நாட்களாக அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் போதெல்லாம் போகாத அதிகாரிகள் இன்று ஏன் போகனும். ஆனால் அதிகாரிகள் போன நேரத்தில் சர்ச்சைக்குறிய சில காட்சிகளை நீக்க திரைப்படக்குழு ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால் நடவடிக்கை ஏதுமின்றி அதிகாரிகள் திரும்பியுள்ளனர். தமிழக அரசு நினைக்கு காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் தமிழகத்தில் சர்கார் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் ஏதாவது காரணம் சொல்லி சோதனைகளும் நடவடிக்கைகளும் பாய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர் விபரம் அறிந்த புதுக்கோட்டை மக்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.