Skip to main content

குடியால் வீழ்ந்த குடும்பம்... தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்!

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

salem district omalur father and son incident

 

சேலம் அருகே, குடிபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையைக் கல்லால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளை குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் விஷ்ணுகுமார் (வயது 24). மாரியப்பனுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவி, மகனிடம் தகராற்றில் ஈடுபட்டு வந்துள்ளார். 

 

ஜூன் 13- ஆம் தேதி வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்த மாரியப்பன், மீண்டும் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணுகுமார், தனது தந்தையைக் கல்லால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி, கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையைக் கொன்று விட்ட பயத்தில், விஷ்ணுகுமார் தலைமறைவாகி விட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்