Skip to main content

இன்று முதல் தொடங்குகிறது கோடை விடுமுறை!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக 1-ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 13ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

school

 

அதனடிப்படையில் ஏப்ரல் 13-ம் தேதிக்கு முன்னரே அனைத்து தேர்வுகளும்  முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்