Skip to main content

சேலத்தில் கறிக்கடைக்காரரை தாக்கிய போலீஸ் எஸ்ஐக்கள் இருவர் இடமாற்றம்! 'முதியவரிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!'

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
p

 

சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். 


நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) என்பதால், கறிக்கடையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு போலீஸ் ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி சப்&இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, '2 கிலோ ஆட்டுக்கறி போடுடா...' என மரியாதைக்குறைவாகவும், அதிகார தொனியிலும் கேட்டார். அதற்கு மூக்குத்தி கவுண்டர், 'மரியாதையாக பேசுங்கள்' என்று கூறினார்.


இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்ஐ பாலசுப்ரமணி மற்றும் அவருடன் வந்த எஸ்எஸ்ஐ சிவபெருமாள் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மூக்குத்திகவுண்டர் மற்றும் அவருடைய மனைவி பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும், அந்த முதியவரை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த மூக்குத்தி கவுண்டரின் மகன் விஜயகுமார், போலீஸ் நிலையத்துக்கு சென்றார். எதற்காக எனது தந்தையை அடித்தீர்கள்? என கேட்டார். இதைக்கேட்ட அங்கிருந்த போலீசார் விஜயகுமாரையும் தாக்கியுள்ளனர். பிறகு, தந்தை, மகன் இருவரிடமும் ஒரு வெற்றுத்தாளில் கைரேகை வாங்கிக்கொண்டு போலீசார் அவர்களை விடுவித்தனர். 


போலீசார் தாக்கியதில் காயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.   இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கமிஷனர் விசாரணை நடத்தினார். 


கறிக்கடைக்காரரை தாக்கிய எஸ்ஐ பாலசுப்ரமணி, எஸ்எஸ்ஐ சிவபெருமாள் ஆகியோரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிட்டுள்ளார். 


இதற்கிடையே, தங்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எஸ்ஐ பாலசுப்ரமணி, கறிக்கடைக்காரர் மூக்குத்திகவுண்டர், அவருடைய மனைவி பழனியம்மாள், மகன் விஜயகுமார் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டார். இது  வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.