Skip to main content

சேலம்: ஒரே நாளில் 30 ரவுடிகள் கைது!

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்கும் நோக்கில் சேலம் மாநகர காவல்துறையினர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குற்றப் பின்னணி உடைய நபர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

arrest

 

ரவுடிகளை மடக்கி கைது செய்வதற்காக 13 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கைது நடவடிக்கை மட்டுமின்றி, மாநகர துணை ஆணையர்கள் தங்கதுரை (சட்டம்&ஒழுங்கு), ஷியாமளாதேவி (குற்றம்&போக்குவரத்து) ஆகியோர், திருந்தி வாழும் பழைய குற்றவாளிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து உரிய அறிவுரை வழங்கி வருகின்றனர்.

 

Salem: 30 rowdies arrest in one day

 

நேற்று ஒரே நாளில் (31.1.2019) மட்டும் குற்றப்பின்னணி உடைய, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மந்தைசாமி மகன் ஜவஹர், பரமசிவம் மகன் 'வளத்தி' குமார், சின்னத்திருப்பதியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பிளேடு செல்வம் என்கிற பன்னீர்செல்வம், அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்கிற மாட்டுக்கார சரவணன், அஸ்தம்பட்டி கன்னாங்காட்டைச் சேர்ந்த பிரதாப், வீராணம் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாட்டாமை செல்வம் என்கிற செல்வம் உள்பட 27 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

arrest

 

கைதான ரவுடிகளில் பலர் மீது 15க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்குகள், அடிதடி, வழிப்பறி வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''விரைவில் மக்களவை தேர்தல் வரப்போகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குற்றங்களை அடியோடு கட்டுப்படுத்தவும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து வருகிறோம். பல வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவராக இருந்தால் அவர்களை குண்டாஸ் சட்டத்திலும் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளோம். இனி வரும் நாள்களில் இந்த நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்படும்,'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.