Skip to main content

தாதாவை அழிக்க தாதா... செக்க சிவந்த வானம் படப் பாணியை கையாளும் போலீஸ்!!!!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

ஒருவரை ஒருவர் மோதவிட்டு, இறுதியில் இருப்பவனை முடிக்கின்றது காவல்துறை. இதுதான் செக்க சிவந்த வானத்தின் க்ளைமாக்ஸ். திரைப்படத்தில் எப்படியோ, அதனை நடை முறையிலும் செயல்படுத்தி வருகின்றது தமிழக காவல்துறை என்பதுதான் வேடிக்கையே..!!

 

 

கடந்த பத்து நாட்களில் மதுரை மாநகரில் கொடூரமாகக் கொலையானவர்களின் எண்ணிக்கை ஐந்து.! மதுரையைத் தாண்டி மாநிலம் முழுக்க என்றால்..? கொலையுண்டவர்கள் அனைவரும் காவல்துறையால் தேடப்படுவர்களே.! கொலை செய்தது அவர்களது எதிரி தரப்பு, பழிக்கப் பழியாக நடந்திருக்கும் என சாவகாசமாய் வழக்கை மூடுகின்றது காவல்துறை. பழிக்குப் பழியாக கொலைகள் என்றாலும் இதனின் பின்புலத்தில் இருப்பதும் காவல்துறையே என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

 

MURDER

 

தமிழகத்தில் மொத்தக் கூலிப்படைகள் 114 எனவும், மதுரையில் மட்டும் கூலிப்படைகளின் எண்ணிக்கை 25 எனவும் காவல்துறையில் ஒரு செய்தி உண்டு. மாநிலத்தில் எங்கு கொலை நடந்தாலும் அதில் மதுரை மற்றும் நெல்லை கும்பலுக்கு தொடர்பிருக்கிறது கண்கூடான ஒன்று. அதில் ஈடுபடும் கும்பல் மதுரையைப் பொறுத்தவரை வில்லாபுரம், கீரைத்துறை, அண்ணாநகர், திடீர் நகர், கரிமேடு, செல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கட்டப்பஞ்சாயத்து செய்வது, ஆட்களை கடத்தி பணம் பறிப்பது, தொழிலுக்கு இடையூறாக இருந்தால் "போட்டு' தள்ளுவது என இவர்களின் "பணி' இருந்தது. இதில் சிலர், அரசியல்வாதிகளின் நட்பை பெற்றதால், அரசியல் கொலைகளை செய்ய ஆரம்பித்தனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, கிருஷ்ணன் ஆகியோர் "வாக்கிங்' சென்றபோது, கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் ராமஜெயத்தையும் மதுரை கூலிப்படையே கொன்றிருக்கக்கூடும் என சந்தேகம், இன்னும் காவல்துறை மத்தியில் நீடிக்கிறது. 

 

MURDER

 

"தமிழகத்திலுள்ள “கூலிப்படையினரை கண்காணிக்க” டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி. தலைமையில் தனியாக OCU எனப்படும் ஒரு பிரிவு இயங்கி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் இந்த OCU  போலீஸ் அதிகாரிகள், கூலிப்படையினரின் நடமாட்டம் குறித்தோ, ஆங்காங்கே நடக்கும் கூலிப்படைகளின் கொலை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதே அவர்களின் வேலை. மதுரையைப் பொறுத்தவரை இந்த OCU பிரிவு கூலிப்படையினரின் லிஸ்டை தங்களது உயரதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில், தமிழ் நாட்டின் டாப் டென் ரவுடிகளில் ஒருவரும், மதுரை அப்பளராஜா,   பைக்காரா கருப்பு, மேலமாசி வீதி சரவணன்,  வி.கே குருசாமி, ரஞ்சித்,  ஜீவா,  ஜான், ஈஸ்வரன், அழகிரி பேரவையின் மகேந்திரன், கண்ணன்,  திருமுருகன் உள்ளிட்டோர் என்கிறது அந்த லிஸ்ட். 

 

லிஸ்டில் உள்ள அத்தனை பேரும் குறைந்தப் பட்சம் ஒவ்வொருவரும் அரை டஜனுக்கும் குறைவில்லாமல் வழக்கு வைத்திருப்பவர்களே. " என்றார் உளவு அதிகாரி ஒருவர். போலீஸாரின் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் இவர்களை சீர்ப்படுத்துவது சிரமம் என்றும், எப்பொழுதும் பெரும் தலைவலியாக இருக்கும் இவர்களைக் கொண்டே இவர்களை அழிப்பது என ஒருவரை ஒருவர் கொம்பு சீவிவிடும் செக்க சிவந்த வானம் திரைப்படப் பாணியை கையாளுகிறது காவல்துறை. அதன் விளைவு தான் சமீபத்தில் கொன்னவாயன் சாலையில் உள்ள மண்டபத்தில் அருகில் கொலையுண்ட கமலக் கருப்பையா என்ற கருப்பு. அதாவது அவருடைய எதிரியை வைத்தே அவரை அழித்துள்ளது காவல்துறை." என்பதால் பீதியில் இருக்கின்றனர் தாதாக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.