Skip to main content

வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து கணவன் மனைவிக்கு விஷம்; நகை கொள்ளை; மனைவி இறப்பு!!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

திருவாரூர் அருகே வீடு வாடகை கேட்பது போலவந்து வீட்டில் இருந்த தம்பதியருக்கு விஷம் கொடுத்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. விஷம் அருந்திய தம்பதியரில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி விஷ்ணுத்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதியர், செல்லப்பிள்ளை அரவது மனைவி சகுந்தலா. செல்லம்பிள்ளைக்கு சொந்தமான மற்றொரு காலியாக உள்ள வீட்டை வாடகைக்கு கேட்டு ஐந்து தினங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வந்துள்ளார்.

 

robbery

 

இந்நிலையில் நேற்று இரவு அதே நபர் மீண்டும் வீடு வாடகைக்கு கேட்டுவந்துள்ளர். அச்சமயம் உடல்நலக்குறைவால்  வீட்டிற்குள் படுத்திருந்த சகுந்தலாவிற்கு தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி, அதனை அருந்தச் சொல்லி வழங்கியுள்ளார். மேலும் அதே மருந்தை செல்லம்பிள்ளைக்கும் வழங்கியுள்ளார்.

 

அந்த மருந்தை அருந்திய சகுந்தலாவும்  செல்லபிள்ளையும் மயக்க நிலைக்குசென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர் சகுந்தலா கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து  தப்பிச்சென்றுள்ளான். பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் தம்பதியர்கள் இருவரும் படுத்துக்கிடப்பதை பார்த்துவிட்டு சந்தேகித்து விசாரித்தபோது அரைமயக்கத்திலிருந்த செல்லபிள்ளை மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட நிலை குறித்தும் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து தம்பதியர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த சம்பவத்தில் சகுந்தலா சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள செல்லபிள்ளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

விஷம் கொடுத்துவிட்டு நகையை திருடிசென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம்குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தோம்," தம்பதியினர் இரண்டு பேரும் தனியாக இருப்பதை தொடர்ந்து நான்கு பேர் கண்காணித்துள்ளனர்.  இருவரும் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யார் யார் அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வீடு கேட்பது போல் முதல் தடவை சென்றுள்ளனர்.  அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வீட்டில் வைத்திருப்பது உள்ளிட்டவைகளையும் என்பதையும் நன்கு கண்காணித்துள்ளனர்.  நேற்று முன் தினம் இருவருக்கும் காய்ச்சல் இருப்பதை தெரிந்துகொண்டே அரசாங்க மருத்துவமனையில் வழங்கும் கசாயத்தில் விஷத்தையும் கலந்துகொடுத்துள்ளனர், மயங்கிய நிலையில் இருந்தபோது நகைகளை திருடிசென்றுள்ளனர், அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்",என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.