Skip to main content

ஒரே மேடையில் விவாதற்கு தயாரா? அதிமுக அமைச்சருக்கு தங்க. தமிழ்செல்வன் சவால்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
Thanga Tamil Selvan



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருத்தாசலம் சட்டமண்ற உறுப்பினர் கலைச்செல்வன் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார்.
 

அக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ கலைச்செல்வன், "தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத் கேட்கும் கமிஷன் தொகையால், தமிழகத்தில் சுமார் 50000 பேருக்கு மேல், தொழில்துறையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல், ஊழல் செய்து வரும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஒரே மேடையில் விவாதற்கு தயாரா?" என்று சாவல் விட்டார். 
 

பின்னர் பேசிய தங்க.தமிழ்செல்வன் "18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் நாள் தான் தமிழகத்தில் தீபாவளி. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலை நிறுத்துவதற்காக தான், பாஜகவின் துணையோடு,  வானிலை ஆராய்ச்சி மையத்தையே பொய் சொல்ல சொல்லி 'ரெட் அலர்ட்' என்று பொதுமக்களை அச்சுறுத்தியது கைக்கூலி எடப்பாடி அரசு. 
 

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து இந்தியா முழவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் போராட்டம் நடக்காதற்கு காரணம் மத்திய அரசுக்கு கைக்கூலியாக செயல்படும் எடப்பாடி அரசே ஆகும் " என்றார். 
 

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பானது எங்களுக்கு சாதகமாக வரும், தீர்ப்பு வந்ததும் அதிமுகவை கைப்பற்றி 47 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுவோம். ஸ்டெர்லைட், மீத்தேன், பெட்ரோல், டீசல், நீட் தேர்வு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த, முறைப்படுத்த துப்பில்லாத அரசாக செயல்படும் எடப்பாடி அரசானது, பாஜகவின் பினாமி அரசு" என்று கூறினார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Next Story

தேனியில் வேட்புமனு தாக்கல் செய்த தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்து

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பிஜேபி கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் உள்பட சில சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், போடி உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பெருந்திரளாக தேனி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்பொழுது வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன்  அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களை மக்கள் மலர் தூவியும் வாழ்த்தியும் மேளதாளத்துடன்  வரவேற்றனர்.

Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

அதைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் சஜிவனாவிடம் தனது வேட்பு மனுவை அமைச்சர்களான ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பின் வெளியே வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பட்டு வேஷ்டி போத்தி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.