Skip to main content

தமிழக மக்களே ! தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதுங்கள் !

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

தமிழகத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகள் உள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்றால் கேள்வி குறி தான் .ஏனென்றால் சாலை வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் , பேருந்து வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எவ்வாறு இந்த பிரச்சினையை தமிழக அரசின் கவனித்திற்கு கொண்டு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் எளிதில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். தமிழக முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டியதில்லை . இதற்கு செலவு செய்ய வேண்டியதும் இல்லை. இதற்கு "INTERNET" இருந்தால் மட்டும் போதும். தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு இணைய தளம் மூலம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் நேரடியாகவும் , எளிதாகவும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். இதற்கான தமிழக முதல்வரின் சிறப்பு தனிப்பிரிவு (Tamil nadu Chief Minister's Special Cell ) இணைய தள முகவரி : http://cmcell.tn.gov.in/ ஆகும். 

cm cell petition

இதை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் முன்னெடுக்க வேண்டும். தங்கள் பகுதியில் நீண்டகாலமாக சாலை இல்லையா ? பேருந்து வசதிகள் இல்லையா ? ஆரம்ப சுகாதார மருத்துவமனை இல்லையா ? குடிநீர் வசதி இல்லையா ? அரசு நூலகம் இல்லையா ?  என்பதை சமந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஆராய்ந்து மக்களோடு இணைந்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு இணைய தளம் மூலம்  கடிதம் எழுதுங்கள். இணையதளம் மூலம் கடிதம் எழுதுவதற்கான வழிமுறைகளை கூறுகிறேன். தமிழக முதல்வரின் சிறப்பு தனிப்பிரிவு இணைய தள முகவரி : http://cmcell.tn.gov.in/ சென்று தனக்கான (Permanent Register) நிரந்தர கணக்கைத் தொடங்க வேண்டும் . இதற்காக கணக்கை (Register) தொடங்க உள்ளவரின் பெயர் , தந்தை பெயர் , நிரந்தர முகவரி , தொலைப்பேசி , ஈ-மெயில் முகவரி , ரகசிய குறியீடு (Password) போன்றவை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பிறகு தனக்கான USER NAME , PASSWORD யை மட்டும் நிரந்தர கணக்கை தொடங்க உள்ளோர் நினைவில் கொள்ள வேண்டும் (அல்லது) தனது ஈமெயில் முகவரியில் சேமித்து கொள்ளலாம் (அல்லது) தங்களது கணினியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். பிறகு தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் அல்லது குறைகள் ஏதேனும் இருந்தால் அவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை தமிழில் டைப் செய்து இந்த இணைய தளத்திற்கு சென்று பின் பதிவிட வேண்டும். புகார் தொடர்பான சமந்தப்பட்ட துறை தேர்ந்தெடுத்து முழு விபரங்களை குறிப்பிட்டு "SUBMIT" செய்ய வேண்டும். 

பின்பு பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண் மற்றும் ஈமெயிலுக்கு "Acknowledgement No"  குறுந்தகவல் வரும். இதனை மனுக்கொடுக்கும் மனுதாரர் சேமித்து வைக்க வேண்டும். இதன் மூலம் மனுவின் நிலையை அறியலாம். மேலும் தமிழக முதல்வரின் சிறப்பு தனிப்பிரிவு மனுதாரரின் மனுவை சமந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் சமந்தப்பட்ட அலுவலகங்களுக்கு  மனுவை அனுப்பி உரிய நடவடிக்கை தொடர்பான பதிலை மனுதாரருக்கும் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிக்கும் அனுப்புமாறு கோரும். இதன் பிறகு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான தகவல் மனுதாரருக்கு கடிதம் அனுப்படும். இதன் மூலம் மனுதாரர் தான் அனுப்பிய மனுவின் நிலை மற்றும் அரசின் நடவடிக்கையை எளிதாக அறியலாம். இளைஞர்கள் மட்டும் இந்த இணையதளத்தை பயன்படுத்தினால் தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யும் வாய்ப்பாக கட்டாயம் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

petition to cm cell

பி. சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.