Skip to main content

திட்டமிட்ட ஊழலை திட்டமிட்டு ஒழிப்போம் - அறப்போர் இயக்கம் முழக்கம்!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டுகள், ஆதாரங்கள்,வேலை செய்யாமல் மக்கள் பணத்தை சம்பளமாக பெற்று வரும் அரசு துறைகள் என அனைத்தையும் அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கம் “என்னங்க சார் உங்க சட்டம்” அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கும் நிகழ்ச்சி மயிலப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது.

 

arappor iyakkam

 

உலகில் உள்ள வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் இந்தியா முக்கியம் பெற்று வந்தாலும் நாளுக்கு நாள் ஊழல்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதை தடுக்க நியமிக்கபட்ட அதிகாரிகளும் அதற்கு உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள். அதை தடுக்கவும் ஊழல் இல்லாத தேசத்தை அமைக்கவும் பல்வேறு அமைப்புகள் இந்தியா முழுவதும்  செயல்பட்டு வருகிறார்கள்.அதில் தமிழகத்தில் தீவிரமாக  அறப்போர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த  நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்  அரசாங்கத்தில் வெளிப்படைதன்மை , ஊழல் தடுப்பு ஒழிப்புதுறையில் சுகந்திரம், ஜனநாயகத்தில் மக்களின் நேரடியாக பங்கேற்பிற்கான அதிகாரம் என்ற முழக்கங்களை வைத்து நடைபெற்றது. 

 

arappor iyakkam

 

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் “தமிழகத்தில்  தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு ஆணையங்களின் அதிகாரத்தை வேண்டுமென்றே நீர்த்துபோகும் வேலைகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி டெல்லியிருந்து நடைபெற்று வருகிறது.பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்து இருப்பவர் அந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன் என்றார். ஆனால் இது வரை ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வில்லை. 2007 ஆம் ஆண்டு அப்போதைய அரசு 126 போர் விமானங்களை ஃபிரெஞ்சு அரசாங்கத்தை கேட்டு இருந்தது. 18 விமானங்களை அரசு தருவதாகவும் 108 விமானத்தை இந்தியா பொதுத்துறை நிறுவனம் மூலமாக தயாரிப்பது என 700 கோடிக்கு  ஒப்பந்தம் போடபட்டது. 2015 ஆம் ஆண்டு 36 விமானங்களாக குறைத்து இந்திய பொதுத்துறை நிறுவனத்தை விலகி விட்டார்கள். அதன் பின்னர் ரிலையன்ஸ் நிறுவனந்திற்கு கொடுக்கபட்டது. 60,600 கோடி ரூபாய் ஓபந்ததில் 20 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கமிஷனாக தரப்பட முடிவு செய்யபட்டு இருக்கிறது.இதில் ஊழல் மட்டும் நடக்க வில்லை நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து இருக்கிறார்கள். இந்த ஊழலில் நேரடியாக அமைச்சர் ஈடுபட வில்லை பிரதமரே நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார். இந்த ஊழல் குறித்து கேள்விகள் எழுப்பும் போது பொய்கள் மேல் பொய்களை மத்திய அமைச்சர்கள் சொல்லி வருகிறார்கள். இது பாதுகாப்பு துறை ஊழல் மட்டுமாக பார்க்க முடியாது பாதுகாப்பு துறையின் முதுகில் குத்தப்பட்டதாக தான் பார்க்கமுடிக்கிறது.

 

 

ஊழல் இல்லாத நாட்டை படைப்போம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக இது வரை லோக்பால் கொண்டுவரப்பட வில்லை. ஊழல் ஒழிப்பு சட்டத்தை வலிமை அடைய செய்வதற்கு பதிலாக ஊழல் வளர்ப்பு சட்டமாக மாற்றி ஊழலே நடக்க வில்லை என்று ஆட்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள்” பேசினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தோல்விகள் குறித்து குறிப்பிட்டு பேசினார்.

 

 

மேலும் இந்த நிகழ்ச்சியில் சமூக செயல்பட்டாளர் அருணா ராய் மற்றும் நிக்கில் டே ஆகியோர் கலந்து கொண்டனர்.  தகவல் பெரும் உரிமை குறித்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை குறித்தும் பேசினார்கள் “ 1996 ஆம் ஆண்டு பல்வேறு நபர்கள் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் வரைவை அப்போதே சமர்பித்தோம்.நாட்டில் 60 முதல் 80 லட்சம் மக்கள் வரை தகவல் பெரும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். கிராமத்தில் உள்ள மக்கள் அதிகம் தகவல் பெரும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஊழல் ஒரு இனவாதம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஜனநாயக விரோதம், பாரபட்சம் என்று பல்வேறு விதத்தில் குறிப்பிட்டார். மக்களிடம் சட்டம் குறித்து புரியவைக்க வேண்டும். அதை புரிய வைத்தால் தான் அது குறித்து பேசி வைக்க முடியும். அப்போது தான் அது குறித்தான போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். தகவல் பெரும் உரிமை சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசபட்டது. சட்டங்கள் அரசியல்வாதிகளால், வழக்கறிஞர்களால் அமைக்க பட்டதாக இருக்க இருக்கூடாது மக்களால் அமைக்கபட்டதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள்” .     

 

 

ஊழலை தடுக்க ஊழல்வாதிகளை தண்டிக்க சட்டங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த வரைவு அறிக்கை நேற்று அறப்போர் இயக்கம் சார்பாக பிரஷாந்த் பூஷன் மற்றும் அருணா ராய் ஆகியோரால்  கூட்டத்தில் வெளியிடப்பட்டது.  

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
publication of list of most corrupt countries released by transparency international

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 100க்கு 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது. மேலும், ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு புள்ளிகள் வழங்குகிறது.

இந்த பட்டியலில், 100க்கு 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், 87 புள்ளிகள் பெற்று பின்லாந்து 2வது இடத்தையும், 85 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று, கஜகஸ்தான், லெசொத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 புள்ளிகளுடன் இந்தியாவுடன் 93 இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இப்பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று, அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.

Next Story

முதல்வர் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு; ஆதாரத்துடன் வெளியிட்ட எம்.பி.

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Allegation of sensationalism against Chief Minister's wife Published with evidence by M.P

 

அசாம் முதலமைச்சர் மனைவியின் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி மானியம் வழங்கியிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சில தினங்களுக்கு காய்கறிகளின் விலை அதிகரித்தது குறித்து பேசுகையில், “காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. அங்கு காய்கறி விற்கும் மியாக்கள் (வங்க மொழி பேசும் இஸ்லாமிய வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இது அப்போது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பிரதமர் மோடி கிசான் சம்பதா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மானியம் பெற உதவியுள்ளார். மத்திய அரசின் திட்டம் அனைத்தும் பா.ஜ.கவை வளப்படுத்துவதற்கா” என்று கேள்வி எழுப்பி அத்துடன் மானியம் பெற்றதற்கான ஆதாரம் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 

 

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடம் இருந்து எந்தவித நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார். 

 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கெளரவ் கோகாய், “உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் முதலமைச்சரின் மனைவியின் பெயரையும், நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு ரூ. 10 கோடி மானியத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருந்தால் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கவும்” என்று கூறி மானியம் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, ஹிமந்த பிஸ்வா, “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும் அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்தார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.