Skip to main content

ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்!

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
raj


திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி மன்ற மாவட்ட செயலாளராக தம்புராஜ் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த மணிமாறன் இறந்த பிறகு முன்னாள் மாநில தலைவர் சத்திய நாராயணுடன் ஒரு நெருக்கத்தை வைத்து கொண்டு தான் மாவட்ட செயலாளர் பதவியை வாங்கினார்.

அதன்பின், தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கி கொண்டு தனிச்சையாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் தான் ரஜனி அரசியலில் குதித்து மக்கள் மன்றம் தொடங்கியவுடனே தனக்கு வேண்டப்பட்ட ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து வளர்த்து கொண்டு, ஆரம்ப காலத்திலிருந்து வந்த ரஜினி ரசிகர்களுக்கு பொறுப்பு கொடுக்காமல் ஓரம் கட்டியே வந்தார்.

இதனால், ரஜினி ரசிகர்கள் மத்தியில் தம்புராஜ் மேல் பெரும் அதிருப்தி ஏற்பட்டு வந்தது. அதோடு தம்புராஜின் தனிச்சையான செயல்பாடுகளை பற்றி மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் தலைமை வரை தொடந்து புகார் அனுப்பி வந்தனர். இந்தநிலையில் தம்புராஜை திடீரென தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ததுடன் மட்டும்மல்லாமல் அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மன்ற உறுப்பினர்கள் எந்த ஒரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதுபோல், அவருடைய மாவட்ட செயலாளர் பதவியை, மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் கூடுதலாக கவனிப்பார் என மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகியான வி.எம்.சுதாகர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இத்தகவலை மாவட்ட தலைவர் எஸ்.டி.பாணிக்கு தெரியப்படுத்தி மக்கள் மன்றம் லெட்டர் பேடு மூலமும் எழுதி கையெழுத்து போட்டும் வி.எம்.சுதாகர் அனுப்பியுள்ளார்.

இந்த நகல் ஜெராக்ஸ்சை மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றம் ரசிகர்களுக்கும் அனுப்பி தம்புராஜூடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தம்புராஜ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இருந்தாலும் மற்றொரு புரம் ரஜினி ரசிகர்கள் தம்புராஜை பதவியிலிருந்து தூக்கி அடித்ததை கண்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.