ரகு மரணத்தை காரணம் காட்டி
ஸ்டாலின் அரசியல் செய்கிறார்:
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறக்கக்கூடாது என்று தி.மு.க. முயற்சி செய்வதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, ‘’எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அமைக்கப்பட்டுள்ள வளைவுகள் மற்றும் பேனர்கள் உரிய அனுமதியோடும் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 14 இடங்களில் வளைவுகள் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகு என்ற இளைஞர் விபத்தில் இறந்த காரணத்தினால் அது கைவிடப்பட்டதாகவும் இந்த விபத்தை காரணம் காட்டி ஸ்டாலின் அரசியல் செய்வதாகவும் , இதே கோவையில் செம்மொழி மாநாட்டில் திமுக சாலை முழுவதும் மாநாட்டு வாகனங்களை அமர்த்தி அதை குடும்பமே வேடிக்கை பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நூற்றாண்டு விழாவில் மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும்,இதன் காரணமாகவே திமுக தடுக்க நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- அருள்