Skip to main content

லாட்ஜ் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்- தப்பிய 3 பேர் யார்? 

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

 


புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே ராயல் பார்க் என்ற பெயரில் தனியார் விடுதி உள்ளது. இங்கு வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி உள்ளூர் நபர்களும் ஏராளம் தங்கியுள்ளனர். அறை எண் 110 ல் மதியம் தங்கியவர்களில் 3 பேர் வெளியே சென்றுவிட்ட நிலையில் அந்தப் பக்கம் சென்ற அறை பணியளர் படுக்கையில் ரத்தம் இருப்பதை பார்த்து திறந்து பார்த்த போது கழிவறையில் ஒரு இளைஞர் ரத்தம் கொட்டிய நிலையில் சடலமாக உக்கார வைக்கப்பட்டிருந்தார்.
  

r

 

உடனே போலிசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் சடலத்தை மீட்டு விசாரனை தொடங்கியுள்ளனர். 


முதல்கட்ட விசாரணையில் இறந்து கிடப்பவர் திருவப்பூர் சௌராஸ்டிரா தெரு ஆனந்தன் மகன் யுவராஜ் (27) என்பது தெரிய வந்துள்ளது. இவர் சுப நிகழ்சிகளில் நண்பர்களுடன் இணைந்து சாப்பாடு பரிமாறும் பணி செய்பவர் என்பதும் இன்று மதியம் 4 பேர் அறை எடுத்து தங்கி மது அருந்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு தாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அதில் யுவராஜ் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் சாய்ந்த நிலையில் அவரை கழிவறையில் அமர வைத்துவிட்டு 3 பேரும் தப்பியுள்ளனர். தப்பிய 3 பேர்கள் யார் என்பது குறித்து போலிசார் தேடிவருகின்றனர்.


  சமீப காலமாக புதுக்கோட்டையில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்