Skip to main content

உறுப்பு தான முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்! - அன்புமணி இராமதாஸ்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

உறுப்பு தான முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை, அவை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒதுக்குவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தானமாகப் பெறப்பட்ட இதயம், நுரையீரல் ஆகியவை தனியார் மருத்துவமனைகளில் உறுப்புக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படாமல், வெளிநாட்டவருக்கு வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். 
 

உடல் உறுப்பு தான முறைகேடுகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சென்னையில் கடந்த சில மாதங்களில் மட்டும் மூளைச்சாவடைந்தவர்களிடம்  தானமாக பெறப்பட்ட 4 இதயங்களில் 3 இதயங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் நடத்திய விசாரணையில்  அதைவிட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2007-ஆம் ஆண்டில் மட்டும் தானமாக பெறப்பட்ட இதயங்களில் 25 விழுக்காடும், நுரையீரல்களில் 33 விழுக்காடும்  வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதயமும், நுரையீரலும் ஒன்றாக மாற்ற வேண்டிய   இந்திய நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 6 பேருக்கு மட்டுமே இதயமும், நுரையீரலும் தானமாக வழங்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் 32 வெளிநாட்டவர்களுக்கு இதயமும், நுரையீரலும் ஒன்றாக தானமாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.
 

உடல்தான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன என்பதால், அங்கு தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகளுக்கு தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையமும் துணை போயிருக்கிறது என்பது தான் கூடுதல் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தான முறைகேடு மிகவும் தந்திரமான முறையில் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்படும் போது, அவை முன்னுரிமை அடிப்படையில்  தமிழக மருத்துவமனைகளில் உள்ள உள்நாட்டு நோயாளிகளுக்குத் தான் பொருத்தப்பட வேண்டும். ஒருவேளை தமிழகத்திலுள்ள இந்திய நோயாளிகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படாவிட்டால், பிற மாநிலங்களில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கும் தேவையில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டு நோயாளிகளுக்கு அவற்றை பொருத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

 

The CPI To conduct an inquiry


 

ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் உள்ளூர் நோயாளிக்கு தேவைப்படுவதாக உறுப்புகளை வாங்கி, அவற்றை சட்டவிரோதமாக வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தியுள்ளன. உள்ளூர் நோயாளிக்கு கடைசி நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டு விட்டது, அவருக்கு அறுவை மருத்துவம் செய்யும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்பன போன்ற சொத்தையான காரணங்களைக் கூறி, அவர்களுக்கான உறுப்புகளை வெளிநாட்டவருக்கு தனியார் மருத்துவமனைகள்  பொருத்தியுள்ளன. இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 

இந்தியர்களின் உறுப்புகள் இந்தியர்களுக்கு பொறுத்தப்படாமல் வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டதை மருத்துவ சேவையாக பார்க்க முடியாது. மாறாக உடல் உறுப்பு வணிகமாகவே பார்க்க வேண்டும்.  இந்தியர்களின் உயிர்களை விட வெளிநாட்டவரின் உயிர்கள் தான் முக்கியம் என்பது போல தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகள் சரியானவர்களுக்கு பொருத்தப்பட்டனவா? என்பதை உறுதி செய்வது தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் முதன்மைப் பணியாகும். ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள்  விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக  உடல் உறுப்பு மாற்று ஆணையம் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த மருத்துவமனை மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசித்திரமாக உள்ளது; இதை நம்ப முடியவில்லை.
 

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தைச் சேர்ந்த மாணவர் ஹிதேந்திரன் 2008-ஆம் ஆண்டு  செப்டம்பர் 20-ஆம் தேதி விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்ததைத் தொடர்ந்து அவரது உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன. அதன்பிறகு தான் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நான், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தேன். இதற்காக தேசிய உடல் உறுப்பு தானத் திட்டத்தை அதே ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தேன். அந்த வகையில் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டிருந்தேன். ஆனால்,  சுயநலக்காரர்கள் சிலரால் தமிழகம் உடல் உறுப்பு  சந்தையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
 

மருத்துவத்தில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்நாட்டினருக்கு   முன்னுரிமை வரிசைப்படி வழங்கப்பட்டது போக மீதமுள்ள உடல் உறுப்புகள் மட்டுமே வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன. இதில் 0.001% கூட விதிமீறல் நடப்பதில்லை. கிட்டத்தட்ட அதேபோன்ற விதிமுறைகள் தமிழகத்தில் இருக்கும் போதிலும் அவை தந்திரமாக மீறப்பட்டிருப்பது  உள்ளூர் நோயாளிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தான் ஆணையத் தலைவராக இருந்த மருத்துவர் பாலாஜி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவர் மீதும் எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

 

விதிகளை மீறி உடல் உறுப்புகள் வெளிநாட்டவருக்கு பொருத்தப்பட்டதால் உள்ளூர் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா? எவரேனும் உறுப்பு வழங்கப்படாததால் உயிரிழந்துள்ளனரா?  என்பது குறித்து விசாரித்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுவதுடன் இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.