Skip to main content

விபத்தில் காயமடைந்தவருக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி... அரசு மருத்துவமனையில் அவலம்!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் பெரியாளூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் கார்த்தீபன் (வயது 38). திங்கள் கிழமை மாலை கீரமங்கலம் சென்றவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் முன்பு எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட தனது மோட்டார் சைக்கிள் பிரேக்கை அழுத்திய போது நிலைதடுமாறி சாலையில் விழ தான் போட்டிருந்த ஹெல்மெட் உடைந்து தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவ்வளவு தரமற்ற ஹெல்மெட்டிலும் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளது தான் வேதனை.
 

அந்தப் பகுதியில் சென்றவர்கள் கார்த்தீபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உடைந்திருந்த தாடையில் தையல் போட வேண்டும் என்று சொன்னார்கள். 

pudukottai bike incident patient treatment cleaning work employees govt hospital


அதன் பிறகு நடந்தது தான் வேதனை அந்த வேதனையை அவரது சகோதரர் காந்தியே வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். தையல் போட மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் வருவார்கள் என்று பார்த்தால் வந்தது காக்கி சீருடை அணிந்த வந்தார் துப்புரவுத் தொழிலாளி. அவர் தான் கார்த்தீபனுக்கு தையல் போட்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினார் காந்தி. 
 

இது குறித்து காந்தி நம்மிடம் கூறுகையில், தம்பி விபத்தில் சிக்கி காயமடைந்த தகவல் கிடைத்து அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் துப்புரவுப் பணியாளர் தையல் போடுகிறார். இதைப் பார்க்க வேதனையாக உள்ளது. நேர்த்தியாக தையல் போடவில்லை என்றால் பின்னால் பிரச்சனைகளும் வரலாம். அரசு மருத்துவமனை இப்படி உள்ளது.

pudukottai bike incident patient treatment cleaning work employees govt hospital



அதே போல ஹெல்மெட் ஐஎஸ்ஐ என்று சிம்பல் இருந்தாலும் அது போலியாக இருந்திருக்கிறது. இது போன்ற தரமற்ற ஹெல்மெட்களை எப்படி விற்க அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை. அரசும் தனியாருமே பல உயிர்களோடு விளையாடுகிறார்கள் என்றார் வேதனையாக.மருத்துவமனை வட்டாரத்திலோ மருத்துவப்பணியாளர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையால் தான் இப்படி அனுபவமுள்ள துப்புரவுப் பணியாளர்கள் தையல் போட வேண்டியுள்ளது என்றனர். ஏழைகளின் உயிர்களோடு விளையாடும் இந்த அவலம் எப்போது மாறுமோ...

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.