Skip to main content

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published on 05/11/2018 | Edited on 05/11/2018


 

sendurai



அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாத, மருந்துகள் இல்லாத நிலையை உருவாக்கிய தமிழக அரசை கண்டித்து செந்துறையில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

 

திமுக மாவட்ட செயலாளர் எஸ். எஸ். சிவசங்கர் தலைமை தாங்கினார். செந்துறையில் உள்ள 24 மணி நேர வட்டார தலைமை மருத்துவமனையில் ஆறு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். மேலும் மருத்துவப் பணியாளர்களும், மருந்துகளும் குறைவாக உள்ளன.  



குமிழியம்24 மணிநேர மருத்துவ மனையிலும், இரும்புலிகுறிச்சி, பொன்பரப்பி, குழுமூர், மணக்குடையான், அங்கனூர் ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருத்துவர்களும் இல்லை மருந்துகளும் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவர்களையும்  மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் மேலும் போதுமான மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.