Skip to main content

ஏழை பிள்ளைகள் படிக்க நம் நிலம் உதவட்டும்-அரசுபள்ளிக்கு நிலதானம் வழங்கிய ஏழைகள்!!

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ளது ம.குன்னத்தூர். இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப்பெற்று வரும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதனை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து பிள்ளைகள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு போதிய இடவசதி இல்லை. அரசு வகுப்பறை கட்டிடங்கள் கட்ட தயாராக இருந்தும் இடம் இல்லாததால் மாணவர்கள் கடும் இட நெருக்கடியில் படித்து வந்துள்ளனர். 

 

The poor who donated land to the state school

 

இதற்காக தலைமையாசிரியர் கண்ணன், சமூக ஆர்வலர் தம்பிதுரை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கடும் முயர்ச்சி செய்தனர். இதனையறிந்து  பள்ளிக்கு அருகே இடம் வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த திமுக கிளை செயாளார் ஏழுமலை - சடையன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 30 சென்ட் இடத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இதிலே ஏழுமலைக்கு இரண்டு பெண் பிள்ளை, ஒரு மகன் உள்ளனர். திருமணமாகாத பெண் பிள்ளைக்கு அந்த இடத்தை தனிநபர்களிடம் விற்று அதை கொண்டு மகளை கட்டி கொடுக்கலாம் இலவசமாக பள்ளிக்கு கொடுக்கக்கூடாது என அவரது குடும்பத்தினர் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

 

ஆனாலும் ஏழுமலை பள்ளிக்கு இடத்தை இலவசமாக கொடுப்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இன்னொருவரான சடையன் இதே ஊர் இப்போது மும்பையில் வசிக்கிறார். அவரது குடும்பத்தினரும் இடத்தை இலவசமாக கொடுக்க கூடாது என தடுத்துள்ளனர். சடையனோ ஏழை பிள்ளைகள் படிக்க நம் நிலம் உதவட்டும் என்று உறுதியாக இருந்ததோடு, குன்னத்தூரில் இருந்த தனது சம்பந்தி ஆறுமுகம் மூலம் இடம் தர உறுதியளித்ததோடு அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய சொல்லிவிட்டார்.

 

அதன்படி நேற்று முறைப்படி தங்கள் இடத்தை பள்ளிக்கு தானமாக எழுதி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து சடையன் விமானம் மூலம் புறப்பட்டு வந்து ஏழுமலையுடன் சேர்ந்து பத்திரப் பதிவில் இருவரும் கையெழுத்திட்டனர். தங்களைப் போல ஏழை பிள்ளைகள் படிப்பில் முன்னேற தங்கள் இடத்தை தடைகளை கடந்து தானே முன்வந்து கொடுத்ததை கண்டு ஊர் மக்கள் மாலை,சால்வை போட்டு பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

Next Story

தேசிய கராத்தே போட்டியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Trichy Government School Girl  Achievement in National Karate Competition

திருச்சி கோட்டை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் சாய்னா ஜெட்லி. இவர் 23 உலக சாதனைகளையும் கின்னஸ் உலக சாதனையும் பெற்றவர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், துணை மேயர் திவ்யா தனக்கொடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பாரத் விபூஷன் விருது பெற்றுள்ளார். இவர் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கராத்தே பயிற்சியாளர் பிரபல டேக்வாண்டோ கிராண்ட் மாஸ்டர் கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி உள்பட பலர் பாராட்டினர்.