Skip to main content

தேர்தல் செலவுக்கு தலா ஒரு லட்சம்! அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர்!!

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி இடைத்தேர்தலும் கூடிய விரைவில் வரப்போகிறது.  இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன.   கட்சிகாரர்கள் சீட்டுக்காகவும் போட்டி போட்டு கொண்டு கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஆளுங்கட்சியினர் எப்படியாவது, வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்களை பணத்தால் அடித்தும் விலைக்கு வாங்க தயாராகி வருகிறார்கள்.  அதற்காக அமைச்சர்களும் தேர்தல் செலவுக்காக ஒரு புறம் பணத்தை குவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

 

sp

 

அதன் அடிப்படையில் தான் இபிஎஸ், ஓபிஎஸ்  அமைச்சரவையில் உள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தன்னுடைய தேர்தல் செலவுக்காக பணம் வசூலில் இறங்கி இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவே நாமும் விசாரணையில் இறங்கினோம். உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருப்பதால் தனது துறையில் உள்ள அதிகாரிகளை மிரட்டி தன்னுடைய தேர்தல் செலவுக்காக ஒரு கணிசமான தொகையை ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வசூலித்து வருகிறாராம். 

 

இது சம்பந்தமாக தேனி , திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் சிலரிடம் கேட்டபோது...... எங்க துறை அமைச்சர் வேலுமணி ஆபிசிலிருந்து போன் வந்ததாக கூறி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி. பஞ்சாயத்து அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு தேர்தல் வர இருப்பதால் அமைச்சருக்கு தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கிறதாம். அதற்காக ஒவ்வொரு பேரூராட்சி செயல் அலுவலர்களும் தலா ஒரு லட்சம் தரவேண்டும் என கூறி இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இன்னும் இரண்டு நாளில் ஒரு லட்சம் ரூபாய் ரெடி பண்ணி அலுவலகத்தில் கொண்டுவந்து கொடுங்கள் அல்லது சங்கத்தில் உள்ள ஒரு சிலரை நாம் வசூலித்து கொடுப்பதற்காக  நியமித்திருக்கிறேன்.  அவரிடம்  கொடுத்தாலும்  இங்கு கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்.  இப்படி நீங்கள் கொடுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பணத்தை  அமைச்சர் ஆட்களே நேரடியாக வந்து எங்களிடம் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள் என மாவட்ட ஏ.டி. அலுவலகத்திலிருந்து அதிரடி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நாங்களும் பணத்தை ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

 

s

 

 திடீரென எங்களிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டால் நாங்கள் என்ன பண்ண முடியும்.  அப்படி அமைச்சர் கேட்ட பணத்தை நாங்கள் கொடுக்கவில்லை என்றால் அதை மனதில் வைத்துக் கொண்டே தேர்தல் முடிந்த பிறகு வேறு  மாவட்டத்திற்கு தூக்கி அடித்து போட்டுவிடுவார்கள்.   அதனால நண்பர்களிடமும் வட்டிக்கும் கூட வாங்கி பணத்தை சேர்த்து வருகிறோம்.  இப்படி நாங்கள் கொடுக்கக்கூடிய பணத்தை  பேரூராட்சிகளில் ஏதாவது   செலவு செய்தது போல் தான் பில் எழுதி  சரி செய்யப்பட வேண்டுமே தவிர நாங்கள் கைகாசு போட முடியாது.  இதனால் மக்களின் வரிப்பணம்தான்  வீணாக போகிறது. 

 


 அமைச்சராக இருப்பதால்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி இப்படி துறை  ரீதியாக  எங்களை போல் உள்ள அதிகாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.  ஏற்கனவே சேலம் உள்பட சில மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலா ஒரு லட்சம் வீதம் அமைச்சருக்கு தேர்தல் கலெக்ஷன் கொடுத்து விட்டார்கள். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளிலும் தேனி மாவட்டத்தில் உள்ள 26 பேரூராட்சிகளிலும் உள்ள செயல் அலுவலர்களின் மூலமாக வசூலிக்கப்படும் 49 லட்சம் மாவட்ட ஏ.டி. அலுவலகத்தில் இருந்து அமைச்சர் ஆதரவாளர்கள் கைக்கு கூடிய விரவில் போகப் போகிறது.  அதன் பின் அமைச்சருக்கு  போக இருக்கிறது இப்படி தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மூலம் பல கோடியை  தேர்தல் செலவுக்காக  அமைச்சர் பகல்  கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி வருகிறார் என்று கூறினார்கள். 

 


இந்த குற்றச்சாட்டுகளை பற்றி அமைச்சர் வேலுமணியிடம் விளக்கம்  அறிய அமைச்சரின் பி.ஏ.சந்தோஷ்-ஐ  தொடர்பு கொண்டு கேட்டபோது... அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார்.  தகவல் சொல்கிறேன் என்று தொடர்ந்து கூறினார்.       இப்படி தேர்தல் செலவுக்காக அமைச்சர் வேலுமணி தனது ஆதரவாளர்களை வசூலிலில் இறக்கி இருப்பது அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.