ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 2 ஆயிரத்து 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாகச் சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதன் மூலம் அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து வழக்கம்போல் இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் 2 ஆயிரத்து 265 என மொத்தம் 4 ஆயிரத்து 365 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.