Skip to main content

சொந்த ஊருக்குள்ளேயே ஓபிஎஸ்சை நுழைய விடமால் தடுத்த மக்கள்!(படங்கள்)

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

 

ப்


  துணை முதல்வர்  ஓபிஎஸ்சின் சொந்த  மாவட்டமான தேனி மாவட்டத்தில்   கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது. 


       திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் திடீரென மழை காற்றுடன் வீசிய கஜா
 புயல் அருகே உள்ள தேனி மாவட்டத்திலும் வீச தொடங்கியதின் மூலம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை  அணை நிரம்பி பெரியகுளம் நகரில் உள்ள வராகநதி  நிரம்பிவெள்ளப் பெருக்கு  ஏற்பட்டதின்   மூலம் நகரில் பல இடங்களில் வெள்ளபெருக்கு  ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் பகுந்து மக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுபோல் ஓபிஎஸ் தொகுதியில்   உள்ள குரங்கனி கொட்டகுடி ஆறு நிரம்பியதின் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .அதனால் உடனடியாக ஆற்று ஓரங்களில் உள்ள பி.சி.பட்டி.,  தேனி பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள்  175  பேரை முன்  கூட்டியே காப்பாற்றி  தேனி நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.   அப்படி  இருந்தும் அந்த மக்கள் குடியிருந்த பல வீடுகளுக்குள்  வெள்ளம் புகுந்தது.  

 

o

 அது போல் ஜவகர் தெரு உள்பட சில பகுதிகளிலும் உள்ள  வீடுகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது.   அதுபோல் போடி நகரிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மட்டுமல்லாமல் அங்கங்கே கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததின் மூலம்  மக்கள் பெரிதும்   பாதிக்கப்பட்டனர்.

   

pp

 

இப்படி கஜாபுயல் மூலம் ஓபிஎஸ்சின் சொந்த  ஊர் மக்களும், தொகுதி மக்களும் பெரிதும் பாதிகப்பட்டனர் என்ற விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே உடனே தேனிக்கு வந்தவர்,  அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்டு விட்டு  உடனே பெரியகுளம்  சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டாளம்மன் கோவில்  தெருவுக்கு சென்று பார்வையிட்டார்.   அப்பொழுது திடீரென அப்பகுதியை சேர்ந்த  50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்சை முற்றுகையிட்டு,  நீங்கள் எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது.  ஓட்டு கேட்கும் போது இந்த பக்கம் வந்தீர்கள்.  அதற்கு பிறகு ஊருக்கு பலமுறை வந்தும் கூட எங்கபகுதிக்கு வந்து மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் தான் இந்த புயலில் வீடுவாசலுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டு இருக்கிறோம். தற்பொழுது இடைத்தேர்தல் வரும் நேரத்தில் மறுபடியும் வந்து இருக்கிறீர்களா என்று கேள்வியை எழுப்பியதுடன்,  மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட  எங்களுக்கு  உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கவேண்டும். இல்லை  என்றால் ஆதார்கார்டு, ரேசன்கார்டுகளை வேண்டாம் என திரும்ப ஒப்படைப்போம் என டென்ஷனாக பேசிய மக்களை ஓபிஎஸ் சமாதப்படுத்தி உடனே அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதி கூறிவிட்டு புறப்பட்டார்.

 

p

 

சிறு வயதில் தன் தம்பி ராஜாவுடன்  தென்கரை வடகரைக்கு நடுவே ஓடக்கூடிய வராகநதி ஆறு நிரம்பி  ஓடுவதில் தான் குளிப்பாராம் ஓபிஎஸ்.  அப்படி பட்ட வராகநதி  ஆறு 40வருட்களுக்கு பிறகு நிரம்பி ஓடுவதை ஓபிஎஸ் பார்த்து,  ஞாபகம் வருதே ஞாபகம்  வருதே என பழைய  நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாராம்.    அதன் பின் இரவு 9 மணிஅளவில் கஜா பயலால் பாதிக்கப்பட்டு  தேனி தனியார் திருமண மண்டபத்தில் குழந்தை குட்டிகளுடன் தங்கி இருந்த பொது மக்கள் 175 பேருக்கு  உணவு பொட்டலம்  மற்றும் பாய், தலையணை,  பெட்சீட்டுகளை வழங்கி அனைவரையும் சாப்பிட சொன்னார்.  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உடனடியாக நிவாரண உதவிகளும் வழங்க வேண்டும்  என உடன் இருந்த மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்க்கு உத்திரவிட்டு விட்டு 
புறப்பட்டார்.

 

p


 ஆறுமணிக்கு எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து தங்கவைத்தும் கூட உடனடியாக உணவு மற்றும்  நிவாரண பொருட்களை  வழங்காமல் ஓபிஎஸ் வந்த பின் வழங்கப்படும் என கூறி  மூன்று மணிநேரமாக  ஓபிஎஸ்க்காக பாதிக்கப்பட்ட மக்கள் மழையில் நனைந்த துணிகளுடன் குளிரிளும் பசியிலும் காத்து கிடந்தவர்களுக்கு தான் இரவு ஒன்பது மணி அளவில் உணவு மற்றும் பொருட்களை ஓபிஎஸ் வழங்கியதை கண்டு பாதிக்கப்பட்ட மக்கள் முகம் சுலித்தும் விட்டனர்.

 

op

 

இப்படி திடீரென வீசிய கஜா புயல் மூலம்  தேனி, திண்டுக்கல்  மாவட்டத்தில் உள்ள  பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள்  சாய்ந்ததின் மூலம் மின் வெட்டும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதை கண்டு மாவட்ட நிர்வாகமும் அதிரடியாக மீட்பு பணியில் குதித்து போக்குவரத்தையும் மின் சாரத்தையும் ஓர் அளவுக்கு சீர் செய்தும் கொடுத்தனர்.  இருந்தாலும் கஜா மூலம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.