Skip to main content

‘காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது!’ -மாணிக்கம் தாகூருக்கு எதிர்ப்பு!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

‘வைகோவுக்காக ஏங்கும் விருதுநகர்’ என்னும் தலைப்பில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியான நக்கீரன் இதழில்,  ‘விருதுநகர் மாவட்ட காங்கிரஸில் உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் சிவகாசி சேர்மன் ஞானசேகரன், விருதுநகர் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி போன்ற சீனியர்களைத்   தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மாணிக்கம் தாகூர் மீது கதர்ச்சட்டைகள் உள்ளுக்குள் வருத்தத்தில் இருக்கின்றனர்.’ என்று குறிப்பிட்டிருந்தோம். 

 

 "No one can save Congress!" - Opposition to Tagore

 

விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அந்த வருத்தம் கதர்ச்சட்டைகளின் கொதிப்பாக மாறியிருக்கிறது. நாளை, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சீனியர்களான, முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் சிவகாசி நகர்மன்ற தலைவர் ஞானசேகரன் போன்றோர், மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என்ற தங்களின் எதிர்ப்பை, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தவிருக்கின்றனர். 

 

 

மாணிக்கம் தாகூர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி காங்கிரஸ் தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார் ஞானசேகரன். அந்தப் புகாரில் ‘2009 மக்களவைத் தேர்தலில் கடுமையாக உழைத்து மாணிக்கம் தாகூரை வெற்றிபெற வைத்தோம். எம்.பி. ஆனபிறகு, கட்சியின் மூத்த நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, கோஷ்டிகளை அவர் உருவாக்கினார். கட்சியில் பொறுப்பு தருவதற்கு பணம் பெற்றதால், கட்சி பலவீனமானது. விருதுநகர் தொகுதி நிலவரங்களை அறியாதவராக இருக்கிறார்.    அதனால், 2011 சட்டமன்ற வேட்பாளர் தேர்வு, நகர்மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு, 2013 மாவட்ட தலைவர் தேர்வு, 2016 சிவகாசி சட்டமன்ற வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் சொதப்பினார். மீண்டும் போட்டியிடுவதற்கு மாணிக்கம் தாகூருக்கு வாய்ப்பு தந்தால், விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.’ என்று தங்களின் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். 

 

 "No one can save Congress!" - Opposition to Tagore

 

மாணிக்கம் தாகூரோ “கட்சியின் சீனியர்களை எதற்காக நான் புறக்கணிக்க வேண்டும்?  தேர்தலின்போது எனக்கெதிராக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தவர்களை எப்படி அனுசரித்துப்போக முடியும்?” என்றார். 

 

காங்கிரஸ் என்றால் கோஷ்டி இல்லாமலா?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பதில் சொல்லுங்க சார்...'- தேர்தல் பறக்கும் படையினரிடம் இரவில் வாக்குவாதம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'Answer me sir...'-Argument at night with election flying soldiers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மறுபுறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு சரியான ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மட்டும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நிலையில் பணத்தை கொண்டு வந்த நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தில் காரில் சென்றவர்களிடம் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 50,000 ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக எடுத்துச் செல்லலாம் எனக்கு கூறப்பட்டிருக்கும் நிலையில் 47 ஆயிரம் ரூபாயை நீங்கள் பறிமுதல் செய்துள்ளீர்கள் என அதிகாரிகளுடன் காரில் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'உங்களுக்கு தேர்தல் பறக்கும் படை வேலை இருக்கிறது என்றால் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? ஹாஸ்பிடலுக்கு கட்டுவதற்காக 47 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டுப் போக முடியாதுன்னு சொல்றீங்க. எப்படி சார் எடுத்துட்டு போகாம இருக்கிறது. செய்தியில் சொல்றாங்க 50,000 வரை எடுத்துக்கொண்டு போலாம்னு. அதுவும் ரவுண்டா ஐம்பதாயிரம் கூட இல்லை 47,000 தான் இருந்தது. அந்த ஜி.ஓ வ எங்களுக்கு கொடுங்க. எங்கள் பணத்தை நாங்கள் எலக்சன் முடிஞ்ச பிறகு கூட வாங்கிக்கிறோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார்.