Skip to main content

சிறையில் இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்ஸில் நிர்மலாதேவி?

Published on 27/02/2019 | Edited on 27/02/2019


அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று கருத்து கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துவிட்டது.  இந்நிலையில், நாளை (28-2-2019) இந்த வழக்கில் மதுரை மத்திய சிறையிலிருக்கும் நிர்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். பிணையில் வெளிவந்திருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும் கூட ஆஜராக வேண்டியதிருக்கிறது. 

 

 nirmaladevi at video conferencing in jail?

 

கடந்த தடவை, நிர்மலாதேவியை இதே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, காக்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.  நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலாதேவியைப் பேசவிடாமல், அப்போது கடுமையாக நடந்துகொண்டது காவல்துறை. ஆனாலும், ஏதோ பேச முயன்றார் நிர்மலாதேவி. எங்கிருந்து வந்த உத்தரவோ, அதனைச் செவ்வனே நிறைவேற்றுவதற்காக, நிர்மலாதேவியைப் படமெடுக்க விடாமல், அவரைப் பேசவும் விடாமல் செய்தனர். அந்தக் களேபரத்தில், நக்கீரன் நிருபரையும்,  சன் டிவி நிருபரையும் பணி செய்யவிடாமல், போலீசார்கள் தாக்கவும் செய்தனர். மற்ற செய்தியாளர்களும் காவல்துறையின் பலப்பிரயேகத்துக்கு ஆளானார்கள். 

 

நிர்மலாதேவி வழக்கில் கடந்தமுறை செய்தியாளர்களிடம் போலீசார்கள் நடந்துகொண்டவிதம், தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டுபண்ணியது. தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. காவல்துறைக்குப் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்ட வழக்கு என்பதால், தற்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன்,  நிர்மலாதேவியை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டி நீதித்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
நிர்மலாதேவி நேரடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா? அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராவாரா? என்பது நாளை தெரிந்துவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.