Skip to main content

என்.ஐ.ஏ சோதனை; வாலிநோக்கத்தில் சாலை மறியல் 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

NIA check; Roadblock in Wali Nokham

 

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல் மேலும் அவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய புகார்களின் அடிப்படையில் இன்று காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

 

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்திய அளவில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில மீனவர் அணித் தலைவர் பரக்கத்துல்லாவிற்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.

 

இந்த கைதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி பரக்கத்துல்லா வீட்டிற்கு முன் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 

 

மேலும் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகளை கண்டித்து போராட்டங்களும் சாலை மறியல்களும் மக்களால் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்