Skip to main content

தென் மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெல்லைத் தேரோட்டம்....! (படங்கள்)

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

 

புகழ் வாய்ந்த நெல்லையப்பர் ஆலய ஆனித் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்க பக்தர்கள் தேரை இழுத்து வருகிறார்கள். இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர், கலெக்டர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தபெற்ற சிவாலயாங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா, கடந்த 10 நாட்கள் நடைபெறும் விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

எட்டாம் திருவிழாவான நேற்று காலை நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி உள் பிரகாரம் உலா வருதலும் நண்பகலில் பச்சை சாத்தி வீதி உலாவும், மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது. கங்காளநாதர் உலாவின்போது கொட்டும் மழையிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 8.45க்கு கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் சத்தியானந்த எம்.பி., ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, அலுவலர் ரோஷினி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பித்து தேர் இழுத்தனர். தேருக்கு முன்னால் கோயில் யானை காந்திமதி, அலங்கரிக்கப்பட்டு பவனியான சென்றது. அதனைத்தொடர்ந்து நெல்லை சிவகானங்கள் சார்பில் பஞ்ச வாத்தியம், சங்கு, திருசின்னம் கொம்பு, பாணி மத்தம், ட்ரெம்பெட், உள்ளிட்ட பஞ்ச வாத்தியங்கள் பழங்க 60 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். இதில் பாரதி சுழலும் படிப்பகம், இந்து ஆலய பாதுகாப்பு பக்தர்கள் பேரவை சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.

அம்பாள் தேர் காலை 9.30க்கு பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வாகையடி முனையை கடந்தது. தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தேர், பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தேர், போத்தீஸ் கார்னர் வரை இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் அம்பாள்தேர் இழுக்கப்பட்டு வாகையடி முனையை அடைந்தது. முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற பக்தி கோஷம் முழங்கினர். இதில் பல்லாயிரக்கண்ணாகன பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி, அம்பாள் தேர்கள் இழுத்து நிலையம் சேர்க்கப்பட்ட பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் கடைசியாக இழுக்கப்படுமு;. ஒரே நாளில் அனைத்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தேரோட்டத்தையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆலோசனைப்படி கீழரதவீதியில் புறக்காவல் நிலையம் அமைத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நான்கு ரதவீதிகள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் 1500 போலீசாரும், சாதாரண உடையில் 300 குற்றப்பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமிரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ரத வீதிகள், சுவாமி, அம்பாள் சன்னதி மற்றும் உள் பிரபகாரம், வெளி பிரகாரம், தேர் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹெலிகேமரா, கண்காணிப்பு கோபுரம் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.