Skip to main content

கப்பலில் தென்னங்கன்றகள் கொண்டு வருவேன் என்று நிர்மலா சீத்தாரமன் சொன்னாரே கொடுத்தாரா? மா.சு. கேள்வி

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

நெடுவாசலில் பசுமை சைதை இயக்கத்தின் சார்பில் தென்னை, மற்றும் மாங்கன்றுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் கப்பலில் தென்னங்கன்றகள் கொண்டு வந்து தருவேன் என்று சொன்னாரே கொண்டு வந்து கொடுத்தாரா? என்று முன்னாள் மேயர் கேள்வி எழுப்பினார்.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் கஜா புயலில் மரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கடந்த மாதம் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் அறக்கட்டனை சார்பில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதே போல அந்த அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று பசுமை சைதை இயக்கத்தின் சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெடுவாசல் கிழக்கு, மேற்கு, புள்ளாண்விடுதி ஊராட்சி விவசாயிகளுக்கு ரூ. 20 லுட்சம் மதிப்பிலான  10 ஆயிரம் தென்னங்கன்றகள் மற்றும் 2 ஆயிரத்தி 500 உயர் ரக ஒட்டு மாங்கன்றுகள் வழங்கும் விழா திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி தலைமையில் எம்.எல்.ஏ க்கள் ஆலங்குடி மெய்யநாதன், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. சென்னை முன்னாள் மேயரும், பசுமை சைதை இயக்கத்தின் தலைவருமாக மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
 

இதனைத் தொடர்ந்து பேசிய மா.சுப்பிரமணியன், புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி விவசாயிகளுக்கு ராணுவக் கப்பல் மூலம் அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள் கொண்டு வந்து வழங்கப்படும் என்று நெடுவாசலுக்கு வந்து வாக்குறுதி அளித்தார்  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆவர் சொன்ன தென்னங்கன்றுகள் வந்தததா? புhதிக்கப்பட்டுள்ள மக்களை ஏமாற்றி சென்றுவிட்டார்.

 

neduvasal


நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கவில்லை என்பதற்தாக இந்தப் பகுதியை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. ஆனால் இந்த மக்கள் கடுமையான போராட்டத்தால் ஜெம் நிறுவனம் ஓடிவிட்டது. அதனால் இந்த மண்ணை வணங்கி மரக்கன்றுகள் கொடுப்பதில் பெருமை அடைகிறோம்.
 

   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாள் முதல் மரக்கன்றுகள் நடுவதாக ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள்.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதாக 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவினர் தெரிவித்தனர். இதற்காக அரசு நிதியில் இருந்து ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளதே தவிர, மரங்கள் இல்லை. ஒரு லட்சம் மரங்கன் வளர்க்கப்பட்டுளை காட்ட முடியுமா? வளர்த்திருந்தால் தானே காட்ட முடியும்.


இப்பகுதி விவசாயிகளை பார்க்கும் போது மரங்கள் வளர்ப்பத்தில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. அதனால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் மாதம் இந்தப் பகுதிக்கு கூடுதலாக 20 ஆயிரம் மாங்கன்றுகளை பசுமை சைதை இயக்கம் மூலம் வழங்கப்படும் என்றார். 

 

neduvasal


 

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசிடம் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை. அதாவது கடந்த ஆண்டு கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம் என்று சொன்னார்கள். பிறகு அந்த தண்ணீர் குடிக்க தகுதியற்ற தண்ணீர் என்று திட்டத்தை நிறுத்தினார்கள். ஆனால் கடந்த ஆண்டு தகுதியற்ற கல்குவாரி தண்ணீர் இந்த ஆண்டு எப்படி தகுதியுள்ளதாகும். மறுபடியும் கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவோம் என்கிறார்கள்.  
 

     திருவிழாக் கூட்டத்துக்குள் பிள்ளைகளை பிடிக்கும் கூட்டமாக மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் வருவார் என்று திமுக தலைவரை  அமைச்சர் விஜயபாஸ்கர்  விமர்சித்திருக்கிறார். அவரை பிடிப்பதற்கு தான் சிபிஐ தேடிக்கொண்டு இருக்கிறது என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
 

     மத்தியில் திமுக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற மண்ணை மலடாக்கும், மக்களை வஞ்சிக்கும் அனைத்து திட்டங்களையும் ரத்து செய்யப்படுவதோடு கர்நாடகாவில் காவிரி ஆற்றில் அணை கட்டுவது தடுக்கப்பட்டு கல்லணைக் கால்வாயின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் தீ விபத்து; அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Salem Govt Hospital incident due to electrical leakage in refrigerator says ma.subramanian

 

ஈரோட்டில்  சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், முத்துச்சாமி, எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

 

ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் இரண்டு நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். நான்கு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சிறிய மின் கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

 

மருத்துவ கழிவை எரிப்பது சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தக் கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழையால் சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை சரி செய்ய 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் என 1397 மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக 220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025 க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

 

 

Next Story

"மருத்துவம் மீறிய மகத்துவம் நிறைந்தவர்" - அமைச்சருக்கு பார்த்திபன் பாராட்டு

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

parthiban praised minister ma subramanian

 

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியமிற்கு உயரிய நன்றி. உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுத்தமைக்கு. தான் இணைந்திருக்கும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தான் மந்திரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் ஆரோக்கியத்தை போலவே தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் கண்ணும் கருத்துமாக பேணி காக்கும் மருத்துவம் மீறிய மன மகத்துவம் நிறைந்தவர். அவருக்கு என் மனப்பூர்வ நன்றி" என பதிவிட்டுள்ளார். 

 

அமைச்சர் சுப்பிரமணியன், இன்று காலை இயக்குநர் விக்ரமனின் வீட்டிற்கு சென்று, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், கால் விரலை கூட அசைக்க முடியாமல் இருந்த விக்ரமனின் மனைவியைப் பார்த்தார். பின்பு, முதல்வரின் அறிவுறுத்தலின் படி 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.