Skip to main content

சட்டவிரோத பேனர்கள் ஏன் அனுமதிக்கப்படுகிறது? ஐகோர்ட் கேள்வி

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
paner

 

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் சட்டவிரோத பேனர்கள் ஏன் அனுமதிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதாகவும், ஆனால் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதை காவல்துறையோ, மாநகராட்சியோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதற்கு காரணமான எழும்பூர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு கொடுத்துள்ளார்.

 

அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையர் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டும், காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என நீதிபதி தெரிவித்தார். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற எவ்வித பாரபட்சமும் இல்லாமல் பேனர்களும் அனுமதிக்கப்படுவதாகவும் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். டிராபிக் ராமசாமி போன்றவர்கள் தங்களுக்காக போராடவில்லை என்றும் நீதிபதி விளக்கினார்.  விதிமீறல் பேனர் பொதுமக்கள் மீது விழுந்தால் பாதிக்கப்படுவது யார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பேனரில் அரவிந்த்சாமி; பதறியடித்த நிர்வாகிகள் 

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Aravindsamy in AIADMK banner; Panicked executives

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நேற்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதில் சில இடங்களில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆதரவாளர்களும், எடப்பாடி அணியை சேர்ந்த ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். எம்.ஜி.ஆர் உடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு அதனை ஒட்டி வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

அந்த வரவேற்பு பேனர் ஒன்றில் எம்ஜிஆர் புகைப்படத்திற்குப் பதிலாக 'தலைவி' என்ற படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு ஆளானது. உடனடியாக பதறியடித்த அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் அரவிந்த்சாமி புகைப்படம் இருந்த இடத்தில் எம்ஜிஆரின் மற்றொரு அசல் படத்தை ஒட்டி விட்டு சென்றனர்.

Next Story

ரவுடி மிரட்டல்; இளைஞர் தற்கொலை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

'Only the hard work should be seen'-threatened by the rowdy

 

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23). இவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த 35 வயது பெண் ஒருவருடன் யுவராஜ் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பேசாமல் இருந்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த யுவராஜ் அவரிடம் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்து அந்த நபரின் மொபைல் எண்ணை எடுத்த யுவராஜ் அந்த நபருக்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.

 

அந்த நபரோ ரவுடி ஒருவரின் உதவியுடன் யுவராஜுக்கு போன் செய்து பதிலுக்கு மிரட்டத் தொடங்கியுள்ளார். தான் பல கொலைகள் செய்திருப்பதாகவும் என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இனி தலையிட்டால் உன்னையும் கொலை செய்வேன் என யுவராஜை மிரட்டியுள்ளார் அந்த ரவுடி. இந்நிலையில் ரவுடியின் மிரட்டலுக்கு பயந்த யுவராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யுவராஜிற்கும் அவரைத் தொடர்பு கொண்டு மிரட்டிய ரவுடிக்கும் இடையேயான உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

அந்த ஆடியோவில் 'நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போ... நானும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன். என் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்குது. உன்ன புடிச்சு உள்ள போடுவாங்களா, இல்ல என்ன புடிச்சு உள்ள போடுவாங்களா பார்ப்போமா. நீ பொழைக்க வந்திருக்க தம்பி. பொழைக்கிற வேலையை மட்டும் பாக்கணும். நான் இந்த ஏரியாக்காரன். எனக்கு சென்னை ஃபுல்லா ஆள் தெரியும். சரியா... நீ எங்க நடமாட்ற, என்ன பண்ற எல்லா டீடெயில்ஸ் எனக்கு வந்துருச்சு..'  என அந்த மிரட்டல் ஆடியோ தொடர்கிறது.