Skip to main content

இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி.. மரண குழியில் தள்ளிய காமுகன் கைது.. உடந்தையான உறவுகளுக்கு வலை

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
k

 

 புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ளது குளமங்கலம் வடக்கு கிராமம். முற்றிலும் விவசாய கிராமம்.  மழை பொய்த்ததால் விவசாயமும் பொய்த்தது. அப்படியான விவசாய குடும்பத்து பிள்ளைகள் குடும்ப வறுமையை போக்க கடைகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படித்தான் சித்திரவேல் மகள் கஸ்தூரியும் 28 நாட்களாக ஆலங்குடியில் உள்ள வெங்கடேஸ்வரா மெடிக்கல்லுக்கு வேலைக்கு போனார். கஸ்தூரியின் திறமையை பார்த்து காலையில் கடையை திறக்கும் பொறுப்பையும் குறுகிய காலத்தில் கொடுத்தார் முதலாளி. 

 

சில நாட்கள் கடை சட்டரை திறக்க சிரமப்பட்ட கஸ்தூரிக்கு உதவி செய்வது போல வந்தான் குட்டியானை ஓட்டுநர் நாகராஜன். சில நாட்கள் அண்ணன் தங்கையாக அறிமுகமானான். அடுத்த சில நாட்களாக காதல் வலை வீசினான். மொத்தம் 10 நாளில் வலையில் விழ வைத்துவிட்டான். ஓய்வு நேரங்களில் காதல் கிரக்கமான பேச்சுகளை செல்போனில் பேசினான். தனிமை சந்திப்புக்கு ஏற்பாடுகளையும் செய்தான்.
 

கடந்த  28 ந் தேதி வேலைக்கு போன கஸ்தூரி வீடு திரும்பவில்லை. பதறிக் கொண்டு தேடி ஓடினார்கள் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்கள் ஆனால் 31 ந் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் கடலுக்குச் செல்லும் ஆற்று வாய்க்காலில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு கல்லும் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது தான் கஸ்தூரியுடன் தைலமரக்காட்டில் உல்லாசமாக இருந்த போது வலிப்பு வந்து இறந்துட்டா சாக்கு மூட்டையில கட்டி ஆற்றில் வீசிட்டேன் என்றான். 

 

இந்த நிலையில் தான் கஸ்தூரியின் உறவினர்கள் பல கிராமங்களிலும் மறியல் செய்ய 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகராஜனுடன் கொலையில் சம்மந்தப்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
      நாகராஜனிடம் முறையாக விசாரித்த பிறகு தான் பாதி வாய் திறந்திருக்கிறான்.

 

n

 

கஸ்தூரியை காதலிப்பது போல என் வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்தேன். 28 ந் தேதியும் ஆலங்குடி ஆண்டிகுளத்தில் உள்ள என் சித்தி பொன்னு வீட்டில் தனிமையில் இருந்த போது எனக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்க பாட்டி போயாச்சு என்று சொன்ன போது என்னை அனுபவித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் கல்யாணமா என்று சண்டைப் போட்டா.. அதனால தள்ளி விட்டேன்.  சுவற்றில் மோதியதும் இறந்துட்டா .  அப்புறம் சடலத்தை மறைக்க என் உறவினர்கள் உதவி செஞ்சாங்க என்று மறு வாக்குமூலம் கொடுத்த பிறகு ஆலங்குடி நீிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் ஆலங்குடி போலிசார். மேலும் நாகராஜனால் அடையாளம் காட்டப்பட்ட நபர்களையும பிடித்த விசாரனை நடந்து வருகிறது.


இதன் பின்னர்தான் கஸ்தூரியின் உறினர்கள்.. கஸ்தூரியை திட்டமிட்டு காதல் வலையில் விழவைத்து அழைத்துச் சென்ற நாகராஜன் கூட இன்னும் சிலர் இணைந்து தான் கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள மறைத்து சடலத்தை மறைத்தவர்கள் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். ஆனால் உண்மையான கொலையாளிகள் முழுமையாக பிடிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் மறுபடி போராட்டம் தான் என்றவர்கள்.. இந்த நாகராஜன் இதே போல இன்னும் சில பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்துவிட்டு கழட்டி விட்டிருக்கிறான். இதில் கஸ்தூரியும் சிக்கி இப்ப சடலமாகிட்டா.. பெண்களை காதல் வலை வீசி பிடிப்பதும் பிறகு கழட்டி விடுவதும் வழக்கமாக வைத்திருக்கிறான்.  இப்போது தான் சிக்கி இருக்கிறான் என்றனர்.
   

பிரேதப்பரிசோதனை முடிவுக்கு பிறகு  பலரும்  சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென வந்த டூப் மோடி; கஸ்தூரி கொடுத்த பகீர் பேட்டி; அப்செட் ஆன அர்ஜுன் சம்பத்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இந்து மக்கள் கட்சி நடத்திய  பாஜக ஆதரவு கூட்டத்தில் 'திமுக கூட்டணி தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என  நடிகை கஸ்தூரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம் கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை அவர் வரவில்லை.

Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இதனிடையே பிரதமர் மோடி வருகிறார் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது மோடி போன்ற வேடமிட்டு நபர் ஒருவர் கையை அசைத்தபடி மேடைக்கு வந்தார். இறுதிவரை கஸ்தூரி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் நிற்க ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. ஆனால் இறுதியாக கூட்டம் முடிந்த பின் சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த நடிகை கஸ்தூரி அர்ஜுன் சம்பத் உடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அவர் பேசியதாவது, 'திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார்.

கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் கூட்டத்திலிருந்து எதுவும் சொல்லாமல் அப்படியே பின்னோக்கி சென்றார்.

Next Story

“மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை” - வசை பாடிய கஸ்தூரி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
kasthuri about kamal mnm stand in lok sabha election

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, அவர்கள் தலைமையில் ஒரு தனி கூட்டணியிலும் தேர்தலை சந்திக்கிறது.  

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் உள்ளிட்ட தி.மு.க முன்னணி நிர்வாகிகளைச் சந்தித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். மேலும் “மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.  

இந்த நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்பிற்கு கஸ்தூரி கடுமையாக அவரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “கமல்ஹாசன் திமுகவிடம் விலை போனதில் ஆச்சரியமில்லை. அவர் மிகவும் மலிவாக ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு விலை போனது தான் ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை. சோகமான விஷயம் என்னவென்றால், அவர் எளிதில் ஜனாதிபதி நியமன எம்.பி.யாகிவிட்டார். அவர் மிகவும் தகுதியானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.