Skip to main content

புயலுக்கு சாய்ந்த நாகலிங்கம் பூ மரத்தை மீண்டும் நட்ட மக்கள் !!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கமல், கொத்தமங்கமல், சேந்தன்குடி, நகரம், வடகாடு, மாங்காடு, குளமங்கலம், பனங்குளம், புள்ளாண்விடுதி, நெடுவாசல் உள்ளிட்ட பல சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்த நிலையில் சாய்ந்த மரங்களை தோட்டங்களில் இருந்து வெட்டி அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் சில விவசாயிகள் சிறிய மரக்கன்றுகளை மீண்டும் இழுத்து நிறுத்தி வருகின்றனர். செரியலூர், கீரமங்கலம் போன்ற பகுதிகளிலும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் சில கிராமங்களிலும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் சாய்ந்த தென்னை மரங்களை பொக்கலின் இயந்திரம் மூலம் மறு நடவு செய்து வருகின்றனர். 

 

Nagalingam leaning to the storm was the people who again Planting the flower tree

 

அதேபோல பல இடங்களிலும் பல பழமையான மரங்களை இயந்திரங்கள் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பள்ளிகள், விழாக்களிலும் மரக்கன்றுகளை நட்டு விழா தொடங்கி பல லட்ச மரக்கன்றுகளை வளர்ந்து வந்த மரம் தங்கச்சாமியின் தோட்டத்தில் சாய்ந்து கிடந்த நாகலிங்கம் பூ மரத்தை மாட்டு வண்டியில் ஏற்றி ஒரு கி.மீ தூரத்தில் உள்ள பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் விவசாயிகள் நட்டனர்.

இது குறித்து மரம் தங்க.கண்ணன் கூறும் போது.. 

 

Nagalingam leaning to the storm was the people who again Planting the flower tree

 

தலைவர்கள் நினைவாக வைக்கப்பட்ட மரங்கள் முதல் தோட்டத்தில் இருந்த அத்தனை மரங்களும் கஜா புயலில் சாய்ந்துவிட்டது. அதில் மீண்டும் துளிர்க்கும் மரங்களை மறுநடவு செய்து வருகிறோம். அந்த வகையில் தான் நாகலிங்கம் மரத்தை பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் நட்டோம். அதாவது ஆலமரம், அரசமரம், பூவரசு, போன்ற மரங்களின் கிளைகளை நடவு செய்தால் வேகமாக வளரும். ஆதற்காக தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் மரக்கன்றுகளை வைத்து வளர்ப்பது போல மரக்கிளைகளை நட்டு வளருங்கள் என்று ஒவ்வொரு கிராமத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பினார். அதன்படி பல அனைத்து கிராமங்களிலும் மரக்கிளைகள் நடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மரத்தையே மறுபடியும் நட்டிருக்கிறோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.