Skip to main content

தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட நாகை மாவட்ட ஆட்சியர்!!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையிலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றபடவில்லை என்கிறார்கள் சமுக ஆர்வளர்கள்.

 

ELECTION

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. குறிப்பாக அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கவும், கட்சிக்கொடிகளை அகற்றவும், தலைவர்களின் சிலைகளை மூடி வைக்கவும், எம்.எல்.ஏ.அலுவலகங்களை மூடி சீல்வைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதி அமலுக்கு வந்ததும் திருவாரூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் காவல்துறையினர் இருந்தபோது அதிமுக காரில் வந்த பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

 

ELECTION

 

ஆனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டுள்ளார் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார். தேர்தலை முன்னிட்டு பணிமாறுதல் செய்யப்பட்ட உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் இன்னும் பணியில் சேராத நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் நாகையில் பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அகற்றபடாமல் உள்ளது. நாகை நகர்புறம் மட்டுமில்லாமல், பழைய பேருந்து நிலையம், கோட்டைவாசல்படி, புத்தூர், மயிலாடுதுறை, சீர்காழி, என பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமலும், அரசியல் கட்சியினரின் கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றபடாமலும் உள்ளது. 

 

ELECTION

 

இதுகுறித்து சமுக ஆர்வளர்கள் கூறுகையில்," தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலட்சியமாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருக்ககூடாது, உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பரங்களை அகற்றப்படவேண்டும். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை தேர்தல் விதிமீறல்கள் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தவேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்  இதுவரை அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் பர்சனல் உதவியாளரை போலவே  இருந்துவருகிறார். தேர்தல் சமயத்திலாவது ஒரு மாவட்ட ஆட்சியரை போல் தன்னிச்சையாக, துணிச்சலோடு, நேர்மையோடு செயல்பட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும். அதை விட்டு விட்டு மாவட்ட அதிமுக செயலாளரை போல் செயல்பட்டால் அவர்மீது வழக்கு தொடருவோம். ஆகவே உடனே விளம்பரங்களை அகற்றப்பட வேண்டும்." என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.