Skip to main content

நாகை கடற்படை முகாமில் நுழைந்த மர்மநபர்... தீவிரவாதியா என உளவுத்துறை தீவிர விசாரணை

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Mysterious person who entered the Nagai naval base! Intelligence Intensive Investigation

 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரிடம், மேப் மற்றும் காம்பஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தால் தீவிரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்துடன் போலீசார் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

 

நாகை துறைமுகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் ஊடுருவல், தீவிரவாதிகளின் நடமாட்டம், எரிபொருள் கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக இந்தியக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

Mysterious person who entered the Nagai naval base! Intelligence Intensive Investigation

 

இந்தநிலையில் நேற்று அதிகாலை, துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்மநபர் ஒருவர், கடற்படை முகாமிற்குள் நுழைந்தார். அப்போது கண்காணிப்பில் இருந்த கடற்படை வீரர்கள் அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதிலே அந்த நபரிடமிருந்து வந்திருக்கிறது. தீவிரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை செய்துவருகின்றனர். 

 

விசாரணையில், அந்த நபரிடம் இருந்த பையில் 6 (மேப்) வரைபடங்கள்,  திசை காட்டும் காம்பஸ் கருவி, அதிக அளவிலான பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன. இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார், க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

Mysterious person who entered the Nagai naval base! Intelligence Intensive Investigation

 

முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சுற்றுலா வந்ததாகவும், வேலை தேடி வந்ததாகவும், உணவு தேடி வந்ததாகவும், மாறிமாறி கூறுகிறார். அதை வைத்தே பிடிபட்ட நபர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’ அமைப்பின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம், திருச்சியிலிருந்து ரா உளவு அமைப்பின் அதிகாரிகள் விரைந்துவந்துள்ளனர். எட்டுமணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

உளவுப்பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு பின்பு பிடிபட்ட அபிஷேக் சுக்லா பற்றிய முழு விவரம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.