Published on 05/06/2021 | Edited on 05/06/2021

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் முதல் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசில் மோப்ப நாய்களின் உதவியோடு ரயில்வே காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். அப்போது கேட்பாரற்று அனாதையாக கிடந்த அந்த சூட்கேசில் 60 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூட்கேஸ்களைப் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், சிசிடிவி கேமராக்கள் மூலம் சூட்கேஸ்களைக் கொண்டுவந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.