Skip to main content

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

முல்லை பெரியாறு

 

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது.

 

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கத்தால் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக 112 அடியில் இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி 113 அடியாக உயர்ந்தது அதன்பிறகு ஜூலை 22ஆம் தேதி மேலும் ஒரு அடி உயர்ந்து, 114 அடியாக காணப்பட்டது. தற்போது இன்று காலை 115.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 525 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1,745 மில்லி கன அடியாக உள்ளது.

 

வைகை அணையின் நீர்மட்டம் 92 அடியாக உள்ளது. அங்கிருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 72 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3.51 கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.7 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 63.8 கனஅடியாகவும் திறப்பு 3 கனஅடியாகவும் உள்ளது.

 

கடந்த 5 மாதங்களாக மழை இல்லாததால் நீர் வரத்து இல்லாமல் காணப்பட்ட நிலையில் தற்போது பெய்துள்ள பருவ மழையால் அரிசி பாறை - பாறை ஓடைகள் மூலம் கடந்த வாரம் சுருளி அருவிக்கு நீர்வரத்துத் தொடங்கியது.

 

அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இருந்தபோதும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லாத சுருளி அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரை தொட்டு ஓடும் வைகை; முதல் முறையாக எஸ்.எம்.எஸ்ஸில் வெள்ள அபாய எச்சரிக்கை

Published on 24/11/2023 | Edited on 24/11/2023
nn

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் அளவுக்கதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால் வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கண்ணாடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதன்முறையாக எஸ்.எம்.எஸ் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், 'மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் வெளியேற்றப்படுவதாலும், மதுரை வைகை கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

“விஜய் ஆட்சியை பிடிப்பாரா என எனக்கு தெரியாது, ஆனால்...” - செல்லூர் ராஜு

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

sellur raju say about actor vijay at press meet in madurai

 

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனால், மதுரை அழகப்பன் நகர் முத்தப்பட்டியில் சேதமடைந்த சாலைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று (08-11-23) பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது அவர், “மதுரையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் சீரமைக்கவில்லை. மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவுகின்றன. மதுரை மாவட்டத்தில் அ.தி.முக. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததை போல் இப்போது திறந்து வைக்கின்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.400 கோடி செலவில் வைகை கரை சாலையை சீரமைத்தோம். ஆனால், அதனை தனது சாதனையாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லிக் கொண்டு இருக்கிறார். 

 

வைகை ஆற்றை சீரமைக்கவும், அதன் கரை பகுதிகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மீண்டும் 2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் வைகை ஆற்றை தேம்ஸ் நதி போல் மாற்றி இருப்போம். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.250 கோடி செலவில் சாலைகள் போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். எந்தெந்த சாலைகள் போடப்பட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டும். திமுக ஆட்சியில், கீழிருந்து மேல்மட்டம் வரையிலும் கலெக்‌ஷன், கரப்சன், கமிஷன் தான். விஜய் ஆட்சியை பிடிப்பாரா? என எனக்கு தெரியாது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார்” என்று கூறினார்.