Skip to main content

நீதிமன்ற நோட்டிஸை வாங்க மறுத்த சபாநாயகர் தனபால்!

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
நீதிமன்ற நோட்டிஸை வாங்க மறுத்த சபாநாயகர் தனபால்!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யாதது ஏன் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டிஸை வாங்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனுக் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கு நடைபெற்றுவரும் நிலையிலேயே, கொறடா உத்தரவை மீறியதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர், கொறடா உத்தரவை சபையிலேயே மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை என்று கேட்டு திமுக கொறடா சக்கரபாணியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த இரு வழக்குகளிலும் வாய்தா வாங்குவதிலேயே அரசு குறியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், சபாநாயகருக்கு அனுப்பிய நோட்டிஸை அவர் வாங்க மறுத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பது இம்மாதம் 27 ஆம் தேதிதான் தெரியும் என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்