Skip to main content

20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

More than 20 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள், எல்லை மீறி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட படகுகளுடன் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அத்துமீறி எல்லை தாண்டி, தங்களின் மீன் வளத்தை அழிப்பதாக வீடியோ ஆதாரங்களோடு, இலங்கை தமிழ் மீனவர்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது 3 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்