Skip to main content

தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த அமைச்சர்கள்!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

 

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக்கடையில் நேற்று எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து ஐந்து கடைகள் முழுமையாக சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணங்களை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்