Skip to main content

கவனம் ஈர்த்த பேனர்; நரிக்குறவர் இல்லத் திருமண விழாவில் அமைச்சர்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Minister Meyyanathan participation in the marriage ceremony at Narikuravar

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகரில் (நரிக்குறவர் காலனி) எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு வைக்கப்படும் பதாகைகள் வித்தியாசமாகவும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பதாகவும் இருக்கும். அதேபோல் இன்று அந்த பகுதியில் நடக்கும் பாலமுருகன் - பானு திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகை அந்த வழியாகச் செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ad

ஒரு பிரபலமான நாளிதழ் மாடலில் அமைக்கப்பட்டுள்ள அந்த பதாகையில் திருமண சட்டப்படி 2 ஆண்டுகளாகக் காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை! என்றும் வாழ்த்துவோருக்கு கல்யாணப் பந்தியில் கலவரம்! பந்தியில் பலகாரம் திருட்டு 3 பேர் கைது! மணப்பெண் தேவை! எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகள், விளம்பர வடிவில் அமைக்கப்பட்ட அந்த பதாகையைப் பார்த்த அனைவரையும் கவர்ந்து இழுத்தது. அதேபோல அறிவொளி நகரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த திருமணத்திற்கும் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

Minister Meyyanathan participation in the marriage ceremony at Narikuravar

அப்போது திடீரென ஒரு புதுமணத் தம்பதி மாலையும் கழுத்துமாக வந்து நிற்க அவர்களையும் வாழ்த்தி கல்யாணப் பரிசுகள் வழங்கினார். நாங்கள் அமைச்சரை போய் அழைக்கவில்லை என்றாலும் எங்கள் இல்லங்களில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் தகவல் தெரிஞ்சாலே வந்துடுவார். அப்படித்தான் இன்றும் வந்து வாழ்த்தினார். இன்றைக்கு 2 ஜோடிகளை வாழ்த்தி கல்யாணப் பரிசு தந்திருக்கிறார். பழங்குடியினர் மக்கள் மீது எப்பவும் பாசமாக இருக்கும் அமைச்சரை எப்பவும் மறக்கமாட்டோம் என்றனர்.

Minister Meyyanathan participation in the marriage ceremony at Narikuravar

அமைச்சர் மெய்யநாதனோ, “கீரமங்கலம் அறிவொளி நகர் மட்டுமின்றி எனது தொகுதியில் மட்டும் இல்லாமல் நான் செல்லும் வழியில் உள்ள ஊர்களில் இதுபோன்ற பழங்குடியினர் வீடுகளில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவங்க அழைக்கவில்லை என்றாலும் நான் போய்விடுவேன். திடீரென நான் போனதும் அவங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. அந்த மகிழ்ச்சி தான் எனக்கும் மகிழ்ச்சி. கடந்த 3 வருடமாக அறிவொளி நகரில் நடக்கும் திருமண விழாக்களுக்கு எனக்கு அழைப்பு இல்லை என்றாலும் கூட என் மேல் உள்ள பாசத்தில் என் படம் போட்டு பதாகை வைக்கிறார்கள். தகவல் தெரிஞ்சா உடனே வந்துவிடுவேன். இன்று கூட ஒரு திருமண தகவல் தெரிஞ்சது. ஆனால் உள்ளே வந்ததும் இன்னொரு திருமண ஜோடி வந்தாங்க. அவங்களையும் வாழ்த்தினேன். பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து படித்து அவர்களும் நல்ல வேலைகளுக்கு போகவேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் பேசி படிப்பை தூண்டி வருகிறேன். இப்போது அறிவொளி நகரில் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.