Skip to main content

என்னய்யா திருவாரூர் மக்கள் மீது அமைச்சர் காமராஜிக்கு திடீர் கரிசனம் - கலாய்க்கும் நகர மக்கள்

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
po6

 

 "திருவாரூர்,திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல் குறித்து யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் . ஆனால் அதிமுக அரசிற்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் அதை வைத்துதான் வெற்றி தோல்வி அமையும்,"  என்றார் உணவுத்துறை காமராஜ்.

 

திருவாரூர் நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், "திருவாரூர் நகர, ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை தேவைகள் செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறறோம். 

 

தஞ்சாவூர் – திருவாரூர் – நாகை  தேசிய நெடுஞ்சாலை இருவழிபாதை மாற்றம் செய்யும் பணிகள் நிர்ணயக்கப்பட்ட காலத்தை தாண்டி பணிகள் காலதாமத்திற்கு இருவழி சாலை என்பது மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது எனவே ஒரே பணியாக அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த துறை அமைச்சரிடம் பணிகளை விரைந்து முடிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. என்றார் .

 

அவரிடமே மேலும் திருவாரூர், திருப்பரங்குன்றம்  தொகுதி இடைத்தோ்தலில் திமுக அமோக வெற்றி பெறும் போல தெரிகிறதே என கேட்டதற்கு  "இந்த ஆய்வு பணிகள் பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பயணம் இதில் அரசியல் பேசுவது சரியாக இருக்காது. யார் எது வேண்டுமானலும் பேசுட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை பொது மக்களின் தேவைகளை பூாத்தி செய்வதே அதிமுக அரசின் நோக்கம் அதை வைத்தே வெற்றி தோல்விகள் அமையும் ". என அமைச்சர் காமராஜ் தொிவித்தார்.

திருவாரூர் மக்கள் மீது என்ன ஒரு திடீர் கரிசனம் அமைச்சர் காமராஜிக்கு என்கிறார்கள் நகரமக்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.