Skip to main content

“உங்கள் மனக்குறையை என்னிடம் சொல்லுங்கள்” - பணியாளர்களின் தோளோடு தோள் நின்ற அமைச்சர் சிவசங்கர் !

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Minister discusses with employees who have taken more days off! Minister discusses with employees who have taken leave!

 

தமிழக முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், மாநகர் போக்குவரத்துக் கழக, அயனாவரம் பணிமனையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (27/05/2022) ஆய்வு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் கடந்த மூன்று மாதங்களில் அதிக நாட்கள் பணிக்கு வராத, அதிக நாட்கள் விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

 

இக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது, தமிழக முதலமைச்சர், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்காக அறிவித்த மகளிருக்கு சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்திட அறிவுறுத்தி உள்ளார்கள். போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும், பொது மக்களுக்கு சேவை செய்கின்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்ற பல்வேறு மனுக்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் வேலைவாய்ப்பு கோரியே வருகின்றன. அப்படி இருக்கையில், நமது போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் கையில் வேலையை வைத்துக் கொண்டு. பணிக்கு வராமல் இருப்பது, நிர்வாகத்திற்கும், தங்கள் குடும்பத்திற்கும் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர வேண்டும்.

 

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளுக்கும் நான் நேரில் சென்று, நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி. பேருந்துகளை முழுமையாக இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். முதற்கட்டமாக கடந்த வாரத்தில் கலைஞர் கருணாநிதி நகர் பணிமனைக்கு சென்று வந்தேன். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பெரம்பூர் மற்றும் அயனாவரம் பணிமனைகளை சேர்ந்த உங்களை சந்திக்கின்றேன்.

 

முதலமைச்சர் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மகளிர் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்காக நிதியினை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே, 40% பயணம் மேற்கொண்ட மகளிரின் எண்ணிக்கையானது, தற்பொழுது 61% ஆக உயர்ந்துள்ளது. சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா வழங்குவது. ஊதிய நிர்ணயம் பே மேட்ரிக்ஸ்-ல் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. அவை ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும்.

 

ஏழை எளிய கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில், பேருந்துகளை அரசுடைமையாக்கி, போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களையே சாரும். இதன் வாயிலாக தற்பொழுது சுமார் 20,000 பேருந்துகள் இயக்கப்பட்டு. சுமார் 1,20,000 பணியாளர்கள் பணிபுரிகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் சுமார் 6 மாநிலங்களில் மட்டுமே போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதுவும், தலைவர் கலைஞரை முன்னோடியாக கொண்டே மற்ற மாநிலங்களில் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

 

கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன். கரோனா காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருமான இழப்பு மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தாலும், பேருந்து பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள், பணியாளர்கள் முழுமையாக பணிக்கு வருகை தந்தும். புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், நடவடிக்கை மேற்கொண்டால், தினம் தினம் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

 

நமது முதலமைச்சர் எங்கு சென்றாலும், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்து வருகிறார்கள். அதை போலவே, அவரது பிரதிநிதிகளான எங்களிடம், பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தால், அதற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீர்த்து வைக்கிறோம். முழுமையாக அனைத்துப் பேருந்துகளையும் இயக்கி, நமது போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தார்கள்.

 

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையானது வழங்கப்படாமல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்கிட முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

அதனைத் தொடர்ந்து, அயனாவரம் பணிமனையில், புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளையும், பணியாளர்களுக்கான ஓய்வறைகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து பணியாளர்களிடம் குறைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் கேட்டறிந்தார்கள்.

 

இக்கூட்டத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், பொது மேலாளர்கள். கிளை மேலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.