Published on 01/11/2022 | Edited on 01/11/2022
![Minister anbil mahesh heard problems public in municipal council meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/wYMtB9Bk-8HtOPSpgusTUV0v_j5zrTw9cq5zw3rP6XI/1667305077/sites/default/files/inline-images/998_4.jpg)
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி தெற்கு மாவட்டத்தில் இன்று நவம்பர் 1ல் மாநகர சபை மற்றும் கிராம சபைக் கூட்டம் பொன்மலை மண்டலம் 3 வார்டு எண் 46 இல் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர், மாநகர செயலாளர், மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோரும் அரசு உயர் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகவும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் மனுக்களை அமைச்சரிடமும் மாநகராட்சி ஆணையரிடமும் வழங்கினர்.