Skip to main content

தொகுதி பிரச்சனையை கண்டுக்காத அமைச்சர் : காங்கிரஸ் பிரமுகர் உண்ணாவிரதம்

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வளரும் நகராகவுள்ளது. தோல் தொழிற்சாலைகள் மூலம் கோடிக்கணக்கில் அந்நியசெலவாணி ஈட்டித்தரும் நகரம்மது. இந்நகரம் பழைய வாணியம்பாடி, புதிய வாணியம்பாடி (நியூ டவுன்) என இரண்டு பகுதியாக பிரிந்து வளர்க்கிறது.

 

 


பழைய, புதிய நகரத்தை பிரிப்பது சென்னை - பெங்களுரூ தேசிய நாற்கார சாலை. பழைய வாணியம்பாடி பகுதியில் இரயில் நிலையம், பேருந்து நிலையம், வர்த்தகபகுதி, நீதிமன்றம், காவல்நிலையம், அரசு மருத்துவமனை எனவுள்ளது. புதிய வாணியம்பாடியில் 25 சதவித மக்கள் தொகையும், கல்லூரிகளும், நகராட்சி அலுவலகம் உள்ளன. பழைய வாணியம்பாடியில் இருந்து நியூடவுன் என்கிற புதிய வாணியம்பாடிக்கு செல்லும் சாலைக்கு ஆலங்காயம் சாலை எனப்பெயர்.

இந்த சாலையில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை 9 மாதங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடி சாலையில் பள்ளம் தோண்டிவிட்ட இரயில்வே துறை, சுரங்கப்பாதை அமைக்கப்போகிறோம் என்றது.
 

இதுப்பற்றி நம்மிடம் பேசிய முக்கிய பிரமுகர்கள் சிலர், வாணியம்பாடியில் இருந்த நியூடவுன் பகுதிக்கு செல்ல ஆலங்காயம் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் ரயில் ரோடு க்ராஸ் செய்வதால் 30 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைத்து தந்தார்கள்.

 

 


அந்த வழியாக தான் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ என சென்றுவந்தது. சாலை போடுகிறோம் என அதன் உயரத்தை அதிகப்படுத்த அதிகப்படுத்த மழைக்காலங்களில் சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் சென்று தேங்கியதால் அது நிரந்தர சாக்கடையாக மாறிவிட்டது. இதனால் மேற்புறமாகவே சென்றுக்கொண்டு இருந்தோம்.

தற்போது இரயில் போக்குவரத்து அதிகமாகி அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் இந்த இடத்தில் மீண்டும் அகலமான நிலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள், வியாபார அமைப்புகள், பொதுநல இயக்கங்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.

 

Minister who does not have a problem with the issue


 

கடந்தாண்டு இரயில்வேத்துறை சுரங்கபாதை அமைக்க 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விட்டுள்ளது. நகராட்சி சார்பில் குடிநீர் குழாய், டெலிபோன் கேபிள் போன்றவற்றை அகற்றி தர வேண்டும். அதை செய்ய நகராட்சி தாமதம் செய்வதால் கடந்த 9 மாதமாக அந்த சாலை மூடப்பட்டுள்ளது.

இதனால் புதிய வாணியம்பாடியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், ஆலங்காயம் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் அதிகமான கிராம மக்கள் தினமும் 4 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு பழைய வாணியம்பாடி நகரத்துக்கு வந்து செல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 4 கி.மீ சுற்றிக்கொண்டு நியூடவுன் பகுதிக்கு செல்கிறார்கள். இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நகரத்தில் உள்ள அமைச்சர் நிலோபர்கபிலும் கண்டுக்கொள்ளவில்லை.

 

 

 

சுரங்கப்பாதை அமைக்கறதுக்காக அருகில் உள்ள தனியார் இடங்கள் சிலவற்றை கையகப்படுத்தனும் அந்த வேலையை இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. ஆனால் அதற்குள் சாலையை மூடிட்டாங்க. இரயில்வேயிடம் கேட்டால் நகராட்சியை கைக்காட்டுகிறார்கள். நகராட்சி ஆணையாளரோ, இரயில்வேயை கைக்காட்டுக்கிறார்.

இதனால் பேருந்துகள் வாணியம்பாடி நகருக்குள் வராமல் நியூடவுன் பகுதியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். அங்கிருந்து மக்கள் வாணியம்பாடி நகருக்கு வர ஆட்டோ பிடித்தால் குறைந்தது 100 ரூபாயாகிறது. பள்ளி பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ மற்றும் வேன் கட்டணங்கள் உயர்ந்துவிட்டது என்றார்கள்.
 

Minister who does not have a problem with the issue


 

இந்நிலையில் சுரங்கப்பாதை அமை அல்லது மூடப்பட்ட கேட்டை திறந்துவிடு என்கிற கோரிக்கையை முன்வைத்தும் இந்த திட்டத்தை முடக்கிவைத்துள்ள அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா, வாணியம்பாடியில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு வாயில் கறுப்புதுணி கட்டி ஜீலை 2ந்தேதி காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் அமர்ந்துள்ளார். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸார் கலந்துக்கொண்டுள்ளனர்.


 

Minister who does not have a problem with the issue


 

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் இந்த தொகுதி எம்.எல்.ஏ. இந்த நகரத்தில் தான் குடியிருந்து வருகிறார். அவரிடம் இந்த மக்களின் இந்த வேதனையை தெரிவித்தபோதும், இதுப்பற்றி அவர் பெரியதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் கட்சிகள் கடந்தும் ஆதரவு திரண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

விளவங்கோடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வகுத்த வியூகம் - எதற்காக களமிறக்கப்பட்டார் தாரகை?

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

தமிழகத்தில் நாடாளுமன்ற முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சார கூட்டத்தில் பேச இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், முதல்வர் வருகைக்குள் காங்கிரஸ் நெல்லை வேட்பாளர்களை இறுதி செய்யும் என தகவல் வெளியாகி இருந்தது.   இதையடுத்து, நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் 'ராபர்ட் ப்ரூஸ்' போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. ராபர்ட் ப்ரூஸ் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
விஜயதரணி

இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து விட்டதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை திமுக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டள்ளது. விளவங்கோடு தொகுதி சட்டபேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக இந்த முறை தான் இடைத்தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் அதிமுக சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார். இதையடுத்த, பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அதிமுக பெண் வேட்பாளரை நிறுத்தியாதல் பாஜகவும் போட்டிக்கு நந்தினியை நிறுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் பெண் வேட்பாளராக 'தாரகை கத்பர்ட்' என்பவரை டெல்லி காங்கிரஸ் தலைமை  நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் 'தாரகை கத்பர்ட்' முதல் முறையாக  இடைத்தேர்தலில் களம் காண்கிறார். இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். 

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் தான். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஜி.ரமேஷ் குமார், தாரகை கத்பர்ட் ஆகிய நான்கு பேரும் இறுதிப்பட்டியலில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections
தாரகை

தாரகை கத்பர்ட் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. முதல் காரணம் நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால் மீனவர்கள் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மீனவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீனவர் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு தருகிறோம் என வெளிப்படையாக சொல்லியுள்ளனர். இதுவும், மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக தேர்வு செய்ய ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் மற்றொன்று உள்ளது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் நடந்த மகிளா காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "விளவங்கோடு தொகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும்.." என சூசகமாக கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் சார்பாக பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பிலும் பெண் வேட்பாளராக தாரகை கத்பர்ட் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

Full report about Tharagai Congress candidate who is contesting Vilavancode by-elections

இதனிடையே, திடீரென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததை கடுமையாக 'தாரகை கத்பர்ட்' விமர்சனம் செய்து வந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வந்த தாரகை கத்பர்டிற்கு இந்த முறை டெல்லி காங்கிரஸ் தலைமை அங்கீகரித்து வாய்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களையும், விளவங்கோடு இடத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரையும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

இன்னும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் என பிரதான நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.