Published on 18/08/2018 | Edited on 18/08/2018

குமுளி மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றி நேரில் ஆய்வு செய்யவந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
முல்லை பெரியாறு அணை தனது முழுகொள்ளளவான 142 அடியை எட்டினாலும் அணை முழு பாதுகாப்புடன் உள்ளது என அணை பாதுகாப்பு குழு கூறியுள்ளது எனவே முல்லை பெரியாற்றின் உயரம் குறைக்கப்படுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை எனக்கூறினார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பதிப்பானது கேரள மக்களுக்கானது மட்டுமல்ல தமிழக மக்களுக்கு ஏற்பட்ட பதிப்பாகவே கருதுகிறேன். அணைப்பாதுகாப்பில் தமிழகம் கேரளா என பிரித்துப்பார்க்கவில்லை. கேரள சகோதர சகோதரிகளின் நலனை மனதில் கொண்டதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் எனக்கூறினார்.