Skip to main content

தேவையான பாலினை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் மு.தொ. நலச் சங்கம் அறிவுறுத்தல்

Published on 01/04/2018 | Edited on 01/04/2018
milk




ஏப்ரல் -3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பரவலாக பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பாலினை முன்னெச்சரிக்கையாக முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவேரி விவகாரத்தில் ஆறு வார காலத்தில் "காவேரி மேலாண்மை வாரியம் "அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மதிக்காமலும், கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு "காவேரி மேலாண்மை வாரியம்" அமைக்க காலம் தாழ்த்தி தமிழகத்திற்கும், தமிழக விவசாய பெருமக்களுக்கும் பெரும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளதோடு, லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகின்றன வகையிலும், 7.5கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமலும் நடந்து கொண்ட மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.கவின் தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், கடந்த ஆறு வார காலத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் மெத்தனமாக நடந்து கொண்டு தற்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், காவேரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை நிரந்தரமாக பெறுவதற்கு மத்திய அரசு உடனடியாக "காவேரி மேலாண்மை வாரியம் "அமைத்திட வலியுறுத்தியும் வருகின்ற ஏப்ரல் -3ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள "மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பங்கேற்கும்" என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

காவேரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் 

மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டமானது காலை 6.00மணி முதல் மாலை 6.00மணி வரை நடக்கின்ற காரணத்தால் குழந்தைகள், நோயாளிகள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே உயிர்காக்கும் பொருளாகவும், அத்தியாவசியப் பொருளாகவும் பால் விளங்குகின்ற காரணத்தால் பொதுமக்கள் நலன்கருதி தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்களும் ஏப்ரல் -3ம் தேதியன்று வழக்கமாக பால் விநியோகம் துவங்கும் நேரமான அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரையிலும், அதன் பிறகு மாலை 5.00மணிக்குப் பிறகும் தங்களின் பால் விற்பனை நிலையங்கள் மற்றும் பால் விநியோக மையங்களையும் திறந்து வைத்து மக்கள் பணியாற்றுவார்கள் எனவும், இடைப்பட்ட நேரமான காலை 9.00மணி முதல் மாலை 5.00மணி வரை தங்களின் பால் விற்பனை நிலையங்கள் மற்றும் பால் விநியோக மையங்களை அடைத்து மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை 1.5லட்சம் பால் முகவர்களும் அளிப்பார்கள். அதுமட்டுமன்றி அன்றைய தினம் தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள், வணிகர் நல அமைப்புகள் நடத்துகின்ற அறவழிப் போராட்டங்களில் எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

மேலும் வரும் ஏப்ரல் -3ம் தேதியன்று நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 25லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை வணிகர்களும் தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளித்து பங்கேற்க இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து தினசரி கொள்முதல் செய்கின்ற பாலில் சுமார் 40% முதல் 60% வரை அன்றைய தினம் கொள்முதல் செய்ய மாட்டார்கள். அதன் காரணமாக ஏப்ரல் -3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பரவலாக பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பாலினை முன்னெச்சரிக்கையாக முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் வழங்கிய நிறுவனம்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 company provided 5000 liters of milk to the people affected by the storm

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. காற்றின் வேகம் குறைவு என்றாலும், கடும் மழை சென்னை வாழ் மக்களை நிலைகுழையச் செய்துவிட்டது. நகரில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிசை வீடுகளிலும், மாடிவீட்டு கீழ்தளங்களிலும் குடியிருந்தவர்களின் வீட்டில் உள்ள அத்தனை உடமைகளும் நாசமானது. இதனை உணர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனவயல் பாரத் பால் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாழ் மக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பாலுடன், பாரத் பால் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் சென்னை சென்று பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு பால் பாக்கெட் வழங்கியதுடன் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்.

5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் வழங்கிய பாரத்பால் நிறுவனத்தினர் நம்மிடம், புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் எப்படி எல்லாம் அவதிப்படுவார்கள், கஷ்டப்படுவார்கள் என்பதை 2018 கஜா புயலின் தாக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு உணர்ந்தவர்கள் நாங்கள். பல நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஆனால் சென்னையில் அதெல்லாம் சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. எங்கள் மக்களுக்கு எங்கிருந்தெல்லாமோ நிவாரணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் மக்கள் உடனே வேலைக்கு போகவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ முடியாத நிலையில் இருப்பார்கள் என்பதால், எங்கள் பாரத் பால் நிறுவனம் சார்பில் 5 லட்சம் லிட்டர் பால் கொண்டு வந்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி இருக்கிறோம் என்றனர்.

Next Story

“நாளை பால் விநியோகம் முழுமையாக சீரடையும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Tomorrow milk supply will be fully restored Minister Mano Thangaraj
கோப்புப்படம்

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

 

அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலருக்கும் இன்று அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான பால் பாக்கெட்கள் கிடைக்காததால் பொது மக்கள் பெரிதும் தவித்து வந்தனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “சென்னையில் நாளை (06.12.2023) காலை முதல் பால் விநியோகம் முழுமையாக சீரடையும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறுகையில், “சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் வழங்கப்படும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்காக அதிகளவில் மீனவர்களின் படகுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.