வேலூர் சிறையில் நளினியுடன் முருகன் சந்திப்பு
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகனை போலீசார் நேற்று காலை பாதுகாப்புடன் பெண்கள் சிறையில் உள்ள நளினியை சந்திக்க அழைத்துச்சென்றனர். அங்கு காலை 8 மணி முதல் 8.30 வரை இருவரும் சந்தித்து பேசினர்கள்.