Skip to main content

திருமுருகன் காந்திக்கு உடல்நலக்குறைவு

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
Medical laboratories



மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, நார்வேயிலிருந்து கடந்த 9ந் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 

இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக அடுக்கம்பாறை மருத்துவமனையில் மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. வாயுத்தொல்லை காரணமாக திருமுருகன் காந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்...

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
Advice of the Corporation of chennai for Private Corona Testing Laboratories

 

சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


அதன்படி, சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்ய வருபவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனியார் ஆய்வகங்கள் பெறவேண்டும். பரிசோதனைக்கு வருபவரிடம் ஆதார் இல்லாவிடில் பரிசோதனை முடிவு வரும்வரை அவரை தனிமைப்படுத்தப்படுத்த வேண்டும். பரிசோதனைக்கு வருவோரின் தொலைபேசி எண்களை உறுதிப்படுத்திய பின்னரே சோதனை மேற்கொள்ள வேண்டும். தங்கள் முழு விவரத்தையும் பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தனியார் ஆய்வகங்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது.