Skip to main content

குறைந்த கூலி... அதிக லாபம்... உயரப் போகும் கோழி விலை!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Low wages for workers ... sales at high profits ...! - Poultry prices are going up due to the struggle

 

மக்கள் இறைச்சிக்காக அதிகம் சாப்பிடும் உணவாக இருப்பது பிராய்லர் கோழிகள். இந்த கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள். தமிழகம் முழுவதும் 25,000 கோழிப்பண்ணைகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில்,  தங்களுக்குக் கோழி நிறுவனங்கள் வளர்ப்புக் கூலி உரிய வகையில் வழங்கவில்லை எனக் கூறி 11 ஆம் தேதியில் இருந்து கோழி வளர்ப்பில் ஈடுபடமாட்டோம் எனக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் மாநிலத் தலைவர் மூர்த்தி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நம்மிடம் கூறினார். "தமிழகத்தில் 25,000 கோழிப்பண்ணைகளில் விவசாயம் சார்ந்த தொழிலாக இதைச் செய்து வருகிறோம். பண்ணைகளில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தப் பண்ணைகளுக்கு ஒவ்வொரு கோழி நிறுவனங்களும், குஞ்சு மற்றும் தீவனங்களை வழங்கி வருகிறது. அதனைப் பெற்றுக்கொண்ட பண்ணையாளர்கள் 40 முதல் 50 நாட்கள் வரை கோழிகளை வளர்த்துக் கொடுக்கின்றனர். இதற்குக் கூலியாக கிலோ ஒன்றுக்கு மூன்று முதல் ஆறு ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.


இந்தத் தொகை முழுமையாகப் போதவில்லை என்று பலமுறை கோரிக்கைகளை வைத்தோம். சென்ற 2010 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4.50 விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தக் கோழி நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. கோழி வளர்ப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து விட்டது. இன்றளவும் கிலோ ஒன்றுக்கு ரூ 3.50 முதல் ஆறு ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள். இதனால், கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை. இப்போது, கிலோ ஒன்றுக்கு 5 வரை மட்டுமே தர முடியும் என அவர்கள் கூறிவிட்டனர்.

 

Low wages for workers ... sales at high profits ...! - Poultry prices are going up due to the struggle


நாங்கள் கேட்ட ஒரு கிலோவுக்கு 12 ரூபாயை தர முடியாது எனக் கூறிவிட்டனர். இதனால் 11ஆம் தேதி முதல் எங்கள் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளை, அந்தக் கோழி நிறுவனங்களே வந்து ஆட்களை வைத்து, குஞ்சுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம். எங்கள் பண்ணையில் உள்ள கோழிகளை வளர்த்துக் கொடுக்க உழைப்புக்கேற்ற ஊதியம் தான், இந்த கோழி நிறுவனங்கள் தர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.

இவர்களின் நியாயமான போராட்டத்தால் கோழி உற்பத்தி குறையும். இதனால், கோழி நிறுவனங்கள் விலையை ஏற்றி, மக்கள் தலையில் தான் கட்டப்போகிறது. தற்போது பிராய்லர் கோழிகளின் விலை என்பது ஒரு கிலோ நூற்று ஐம்பது ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. குஞ்சு, தீவனம், வளர்ப்புக் கூலி என்று கணக்கிட்டால் முதலீடு என்பது ஐம்பது ரூபாயைத் தாண்டாது. ஆனால், இரவு, பகலாக இந்தக் கோழிகளை வளர்த்துக் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய கூலியை தராமல், அவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள். 

 

உழைப்பாளர்களுக்குக் குறைந்த கூலி, வாங்கும் நுகர்வோருக்கு அதிக லாபத்தில் விற்பனை. இது தானே முதலாளித்துவக் கோட்பாடு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.