Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம்!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 18 மணி நேரமாக தொடர்கிறது. அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் விவரம்!


தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் ஒன்றியம் 15- வது வார்டில் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் மனைவி சுகிர்தா வெற்றி. அதேபோல் 13- வது வார்டு கவுன்சிலராக அரிச்சந்திரன் வெற்றி. 

மதுரை: கொட்டாம்பட்டி ஒன்றியம் 5- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக ராஜலட்சுமி வெற்றி. 

தேனி: போடியநாயக்கனூர் ஒன்றியம் 1- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் ப்ரீத்தா வெற்றி. 

LOCAL BODY ELECTION RESULTS 2020 UPDATE

தேனி: கம்பம் ஒன்றிய 9- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் தமயந்தி வெற்றி. 
திருவாரூர் ஒன்றியம் 9- வது வார்டில் மணிகண்டன் வெற்றி. 
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் 11- வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரேமா வெற்றி. 
திருப்பூர்: அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி வெற்றி.
நாகை: வேதாரண்யம் ஒன்றியம் 19- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக பாஜக வேட்பாளர் சோழன் வெற்றி.
நாகை இரண்டாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான எம்சிஏ பட்டதாரி அனுசியா வெற்றி. 
திருவள்ளூர் 13- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக காங்கிரஸ் வேட்பாளர் தேவி வெற்றி. 


 

சார்ந்த செய்திகள்